Monday, January 15, 2018

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் இஷிதா அவர்களின் விமர்சனம்

ரொம்ப நாளா முழு நீள ரிவ்யூ கொடுக்கணும்னு ஆசை.. அந்த ஆசைக்கான பிள்ளையார் சுழியை உங்களோட “#பேசும்மொழியிலெல்லாம்” கதைக்கு போட்ருக்கேன்..

அது மட்டுமில்லை இதுல ஒரு சின்ன சுயநலமும் இருக்கு அது என்னவென்றால் இந்த பவி @Pavithra Narayanan இருக்குற எல்லா கதை ஹீரோவையும் எனக்கு அண்ணன் முறைனு சொல்லியே ஆஃப் பண்ணிடுறா.. இப்போ அண்ணன்களோட லிஸ்ட்க்கு அடிஸனல் சீட் கேட்டிருவாளோன்ற பயத்துல எனக்கு பிடிச்ச ஹீரோவை புக் பண்ண நானே களத்துல குதிச்சுட்டேன்
(பவி செல்லோ உனக்கு முன்னாடி நான் ரிவ்யூ போட்டுட்டேன் சோ எனக்கு தான் முன்னுரிமை )

பிரமோத் (செல்லக் குட்டி):
ஒரு சிலரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும்னு சொல்ற மாதிரி.. பார்க்க பார்க்க பிடிச்சு போற ஆளு நம்ம பிரமோத்..😍😍
ஆசைப்பட்ட எந்த விஷயத்தையும் கைப்பற்றிக்குற ஒரு பின்புலத்துல பிறந்து வளர்ந்தவன், தான் ஆசைப்பட்ட, நேசிச்ச நயனியை விட்டு கொடுத்ததுக்கு ஓரே ஒரு காரணம் தான் அது அவன் நயனி மேல வச்ச காதல்..! நீங்க சொன்னது மாதிரி பல படிகளுக்கும் மேலான உன்னதம்..
மூவியில ஒரு டயலாக் இப்படி வரும் “நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பொருள், நம்மகிட்ட இருக்கதை விட இன்னொருத்தர்கிட்ட இன்னும் பத்திரமா இருக்கும்னா அதை விட்டு கொடுக்குறதுல தப்பு இல்லைனு” அப்படி விட்டு கொடுக்குறது வலி தான் ஆனாலும் அதையும் தாண்டி அந்த பொருளோட பாதுகாப்பை நினைக்குறப்போ சின்ன சந்தோஷத்தோட ஒரு மன திருப்தி இருக்கும்ல அது வலியோட ரணத்தை குறைச்சிடும் ..பிரமோத்தும் அதை தான் செய்துருக்கான்னு தோணுச்சு..

“வில்”லனோ அப்படினு நினைக்குற மாதிரி கதையில் நுழைஞ்சாலும் கடைசியில எல்லார் ஹார்ட்லயும் அம்பு விட்டது என்னவோ இந்த ஸ்வீட் ‘வில்’லன் தான்..!😘😘😘

வெற்றி:
இவனை பத்தி என்ன சொல்றது … சிலரை பார்த்ததுமே நமக்கெல்லாம் பிடிச்சிடும் .. அந்த மாதிரி கேரக்டர் தான் வெற்றி.. நம்ம வீட்டுல இருக்க அண்ணனோ (ச்ச இந்த பவி சொல்லி சொல்லி எனக்கு அண்ணன்னே வருது). ஒரு அத்தைப் பையனோ இல்லை மாமா பையனோ இருந்தா இந்த மாதிரி இயல்பா தானே இருப்பான் ..அவன் மேல ஒரு பிடித்தம் தானா வந்திடும்ல அது போல வெற்றியை பார்த்ததும் பிடிச்சிடும் எல்லாருக்கும்..
எந்த ஒரு நிலையையும் கஷ்டப்பட்டு முட்டி மோதி தான் அடைய முடியும்ன்ற சூழ்நிலையில இருக்க ஒருத்தன் தனக்கு கிடைச்ச ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவ விடாம இருக்க ஒவ்வொரு அடியையும் எவ்வளோ நிதானமாக எடுத்து வைப்பானோ அந்த நிதானம் அவனோட ஆர்ப்பாட்டமே இல்லாத அழகான காதலா இருக்கட்டும், திருமணத்தை நடத்திக்கிட்டதாகட்டும், ப்ரோமோத்கிட்ட நடந்துகிறதாகட்டும் வெற்றியோட ஒவ்வொரு செயலிலும் அது பிரதிபலிச்சுது.

நயனிகா:
பெரியவங்க செய்ற செயலோட விளைவு எல்லாம் சின்னவங்க தலையில் விடியும்னு சொல்ற மாதிரி, கார்த்தியோட சுயநலமான முடிவுகளோட விளைவு எல்லாம் நயனி தலையில் வந்து விழுந்திருச்சு.. நடுத்தர வர்க்கம் சந்திக்கிற பிரச்சனைகள், மனகசப்புகள், பணத்தேவைகள்னு ஒருவித மனப்புழுக்கதோட வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு இருக்க நயனியின் வாழ்வில் சிலிர்க்க வைக்கும் தென்றலாய் வெற்றியின் வருகை, அவனது காதல்..!

கதையில் வர்ற மற்ற கதாபாத்திரங்களும் நிறைவா கதையோட பொருந்தி இருந்தாங்க.. இப்படி அழகான ஹீரோக்களை கொடுத்து இரண்டு பேருக்கும் இடையில எங்களை இப்படி ஆட்டம் காண வச்சுட்டீங்களே ஹமீதாக்கா அவ்வ்வ்.. இருந்தாலும் வெற்றியோட கையை நயனி பிடிச்சுக்கிட்டதாலே, நாங்க எல்லாம் பிரோமோத்தோட கை கோர்த்துக்குறோம் ஹி ஹி ஹி😂😂😂😂

(ரிவ்யூ கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க ஹமீ அக்கா)

இந்த அழகான கதை என் கையில் கிடைக்க செய்ததற்கு நன்றி சிபி அண்ணா, ஹமீதா அக்கா

No comments:

Post a Comment