Thursday, October 25, 2018

தீபாவளிப் பரிசு #2



தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

என்னதான் ஆன்லைனில் கிண்டிலில் நாவல்கள் வாசித்தாலும், புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி... அதன் புத்தம் புதிய வாசனையின் இனிமையில் லயித்தபடி, மனதிற்கினிய நாவல்களை வாசிப்பதன் சுகம் என்பது அலாதியானது!

அப்படித்தானே நட்புகளே!

உங்கள் அனைவரின் புத்தக வாசிப்பு ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு இனிய அறிவிப்புடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துள்ளேன்.
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நமது SS பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் இன்று முதல், அதாவது 23/10/2018 முதல் 7/11/2018 வரையிலான பதினாறு நாட்களுக்கு 25% கழிவில் கிடைக்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

23/10/2018 to 07/11/2018 Disc @ 25%

கீழ்க்கண்ட இணைப்புகளை சொடுக்கி உங்கள் அபிமான நாவல்களை சலுகை விலையில் வாங்கி மகிழுங்கள்!

http://www.marinabooks.com/category?pubid=0550

http://www.wecanshopping.com/

எமது வெளியீடுகளுக்கு வாசகர்கள் நல்கி வரும் நல்லாதரவுக்கு என்றென்றும் எனது நன்றிகள்.

அன்புடன்
S. ஹமீதா.
(எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ்)

Tuesday, October 23, 2018

தீபாவளிப் பரிசு #1


வணக்கம் தோழமைகளே!

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருகிறது. பண்டிகைக் காலத்திற்கேயுரிய உற்சாகத்துடன் அனைவரும் வளைய வரும் இந்த இனிய வேளையில் உங்களுக்கான தீபாவளிப் பரிசுடன் வந்திருக்கிறேன் நட்புகளே!

நவம்பர் 6, 2018 இந்திய நேரம் பிற்பகல் 1:30 மணி முதல் நவம்பர் 7, 2018 பிற்பகல் 1:29 மணி வரை, கீழ்க்கண்ட லிங்கில் உள்ள எனது நாவல்களை, அமேசான் கிண்டிலில் முற்றிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

#InIndianISTTimings: from 06/11/2018 13:30 – to – 07/11/2018 13:29 IST

வாசகர்கள் அளித்துவரும் அபரிமிதமான அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் எனது அன்பும் நன்றிகளும்.

SS பதிப்பகம் சார்பில் பண்டிகைக்காலச் சலுகை தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்த பதிவுகளில்...

காத்திருங்கள்!

அன்புடன்
S. ஹமீதா.

Amazon.in: hameeda: Kindle Store 


Wednesday, October 10, 2018

உந்தன் அலாதி அன்பினில் - இப்போது அமேசான் கிண்டிலில்

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.

'உந்தன் அலாதி அன்பினில்' நாவல் Amazon.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. வாசித்து மகிழுங்கள் நட்புகளே!

நன்றி.

Monday, October 8, 2018

Thank you Dears...

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்!

'யாரைக்கேட்டது இதயம் ?' நாவலின் முழு லிங்கை ப்ளாகில் பதிவிட்டு ஒரு வாரம் கடந்து விட்டது.

இந்த ஒரு வாரகாலமும் வாசகர்களின் கருத்து மழையில் திக்குமுக்காடிப் போனேன் என்பது நிஜம்.

மின்னஞ்சலில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தோழிகள் Keerthana B ; Padmavathy Prabhakaran

ரமணிச்சந்திரன் நாவல்ஸ் க்ரூப்பில் விமர்சனம் பதிவிட்ட தோழிகள் Jasha Jasha Rabima Sanofar Esther Joseph

ப்ளாகில் கருத்துகள் பதிவிட்ட தோழிகள் cynthia devi ; Anu MN ; Chithra Venkatesan Sujitha Karthik ; Selva Ganesh ; Surya Priya B

இன்பாக்ஸில் தங்களது விரிவான கருத்துகளைப் பகிர்ந்த தோழிகள் Leena Fahima Risha Mohamed Mukilarasi Vengadesan Fathima Ashfa

மீண்டும் இக்கதையை வாசிக்கப்போவதாகச் சொல்லி ஆர்வமுடன் வாசித்து fb பதிவுகளில் கருத்துகள் பதிவு செய்த தோழிகள் - அனைவரின் அன்புக்கும் அருமையான கருத்துகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒவ்வொரு கதை வாசித்த பின்னும் இன்பாக்ஸில் வந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் திருமதி. Sharada Krishnan அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

கதையின் லிங்க் வரும் புதனன்று மாலை வரை ஆக்டிவாக இருக்கும் என்பதை இப்பதிவின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கதையின் முழு லிங்குடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் தோழிகளே!

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா.

வாசகி கீர்த்தி அவர்களின் மின்னஞ்சல் பகிர்வு


யாரைக்கேட்டது இதயம்?

ஆரம்பமே அசத்தல்.. PNA நியுஸ் ஹெட், சுமந்தின் வலைப்பதிவிற்க்கு வருகிறது ஒரு தகவல்.. பாரதி என்ற புனைப் பெயருடன்,     

சில உண்மை சம்பவங்களை மைய்யமாகக் கொண்டு ஒரு தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் முதல், வாரம் இரு பதிவுகள் பதிவிடத் திட்டமிட்டிருக்கிறேன்.தனி மனித ஒழுக்க சீர்கேட்டினால் குடும்பம் முதல் சமூகம் வரை எவ்வாறு நேரடி... மறைமுக பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதே இத்தொடரின் மைய்யக் கரு.”

சுமந்த்தை வாசிக்க சொல்லி அழைப்பு விடுக்கிறாள் பாரதி.. இதிலிருந்து தொடங்குகிறது கதை.. தன் வாழ்வில், நடந்த கசப்பன சில சம்பவங்களை அவந்திகாவின் வாயிலாக கதையைத் துவங்குகிறார் பாரதி.. கதையின் வாயிலாக அவர் கொடுக்கும் சில தகவல்கள், எங்கோ நேர்மையாக பணியாற்றும் ஒருவரின் உயிரை காப்பாற்ற பயன் பட்டதா இல்லையா என்பது தான் மீதிக் கதை….

பாரதி, அவந்திகா, ஷ்ரேயா மூவரும் யார்..??அந்த அதிகாரிக்கும், சுமந்திற்க்கும் என்ன தொடர்ப்பு, சுமந்த் எவ்வாறு ஷ்ரேயாவையும், அவள் குடும்பத்தினரையும் சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறான் என்பதில் இருக்கிறது கதையின் ஸ்வாரஸ்யம்

எந்த இடத்திலும் சிறு தொய்வின்றி நகற்கிறது கதைஆண் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், இந்த சமூகப் பார்வையில் அதை சுலபமாக கடந்து விடுகிறான். ஆனால்  பாதிப்பு என்னவோ அந்த ஆணின் குடும்பத்திற்க்கும் அவன் மனைவிக்கும் தான் என்பதை சுமதியின் வாயிலாக அறியலாம்..

தனி மனித ஒழுக்கத்தின் தரம் தாழ்ந்ததற்க்கு இன்றைய திரைத்துறையும் காரணமென்பதை ஆழமாக பதிவிட்டிருக்கிறார்.. வாழ்க்கை எப்போது எவ்வாறு வேண்டுமானலும் மாறும் , பாதை மாறும் போது அதை எதிர் கொள்ள கற்ற கல்வியை விட மிகச் சிறந்த துணை வேறு எதுவும் இல்லை .. தவறு செய்தவர்கள், தண்டனை பெற்றே ஆகவெண்டும் என்பதை  தன் அறிவால் ஷ்ரேயா நிடத்திக் காட்டுகிறாள்..

ஹீரோ சுமந்த்எப்பொழுதும் போல உங்கள் அன்பான எனர்ஜடிக் ஹீரோ.. என்ன தான் தவறான வழியில் தந்தை அரசியலில் சம்பாதித்த பணத்தை மூலதனமாக கொண்டு தன் லட்சிய கனவான ஊடகத்துறையில் கால் பதித்தாலும் , நான் மக்களுக்கு நன்மையைத் தான் செய்கிறேன் என்று கூறும் யதார்த்த மனப்பான்மை கொண்டவன்.. ஷ்ரேயாவின் அன்புக் காதலன்… “காதலித்துப் பார்……..” என்று கண்ணியமாய் காதல் புரிபவன்….         நியாயவாதி( ஆளை கடத்தியும்  நிரூபிப்பான்).. நேர்மையான விவேக்கின் அபிமானி. மொத்ததில் எனக்கு பிடிச்ச ஹீரோங்க..

ஹீரொயின் ஷ்ரேயா.. அழகான அன்பான அறிவான (கல்யாண மாலை விளம்பரம் மாதிரி இருக்கோ !!) ஹீரொயின்.. தம்பியை தடம் மாராமல் வழிநடத்தும் ஆசான். அன்னையை கொடும் துயரில் இருந்து மீட்டெத்துதவள்.. சமூக நல கொள்கைகள் கொண்டவள். தன் உறவே தவறு செய்தாலும் தண்டனை பெற்றுத் தரும் நேர்மையானவள்..  சுமந்தின் மனம் கவர்ந்தவள்.

மற்றொரு மனம் நிறைந்த நாவல்.  மொத்ததில் FEEL GOOD..

With luv,
Keerthi.

Monday, October 1, 2018

தோழி லதா சேகர் அவர்களின் விமர்சனம்

உந்தன் அலாதி அன்பினில்

தலைப்பிற்காகவே வாசிக்க நினைத்த நாவல்...
 
எப்போதும் ஊருக்கு சென்றாலும் அதிகப்படியான லக்கேஜ்களால் பல பொருட்கள் விமான நிலையம் வரை வந்து திருப்பி அனுப்புவதும் உண்டு..
என் புடவைகள் ஒன்று கூட எடுத்து வராது போனாலும் ஹமிதா தந்த இரு நாவல்களும் கண்டிப்பாக வர வேண்டும் என்பதை திரும்ப திரும்ப சொன்னதால் மறக்காமல் கொண்டு வந்து விட்டார்...

புத்தம் புது புத்தகத்திற்கே ஒரு மணம் உண்டு
சிறு வயதில் ஆனந்தவிகடன், கல்கண்டு,குங்குமம், குமுதம் முத்தாரம் என்று என் அப்பா வாங்கி வந்து படிப்பதை பார்த்து நானும் படிக்க ஆரம்பித்த பிறகு முதலில் என்னிடம் தந்து நான் வாசித்த பிறகே அவர் வாசிப்பார், இது தெரிந்ததால் தான் நீ படித்துவிட்டே அனுப்பு என்று சொல்லியும் என் தங்கை கவரைக்கூட பிரிக்காமல் அனுப்பி விட்டாள்...
 
எப்போதும் மறக்காமல் எனக்கு நாவல்களை பரிசளிக்கும் உங்கள் அன்பிற்கு மிகப்பெரிய நன்றிகள் Hameeda Hamid👏👏

நிறைய வேலைகள் இருந்தாலும் வாசிக்கும் பழக்கம் உடன் இருந்து கொண்டே தான் இருக்கும்...
 
வெகுநாட்களாக கப்பல் பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை இந்த நாவல் படிக்கும் போதே நிறைவேறியது..
 
தமிழ்ச்செல்வனுடன் நாமும் பயணம் போனோம், கப்பலில் உள்ள ஒவ்வொருவரின் பணிகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்க ஆசிரியர் எடுத்துக்கொண்ட அந்த ஈடுபாட்டிற்கு முதலில் பாராட்டுக்கள் ஹமிதா🌹🌹🌹
 
சராசரி ஆண் மகனைப்போல இல்லாமல் சவால்களை சந்திக்கும் பணியை நேசிக்கும் நாயகன் தமிழ்ச்செல்வன் வழக்கம் போல உங்களின் வித்யாசமான நாயகர்கள் வரிசையில்...
 
தன் சுயநினைவு இழந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதும் தன் நாயகியை அறிமுகப்படுத்துவதும் மிகவும் இயல்பாய்...
 
தான் நேசிக்கும் பெண் தன் குடும்பத்தை மட்டுமல்ல தன் துறையையும் சேர்ந்து நேசிப்பதே பெரும்பாலான ஆண்களின் விருப்பம், தன் துறை சார்ந்த பணிகளையும் சவால்களையும் அதில் இருக்கும் சங்கடங்களையும் வலிகளையும் அவமானங்களையும் தாயிடம் கூட பலர் வெளிப்படுத்துவதில்லை, ஆனால் தன் துணையிடம் அவர்கள் வெளிப்படுத்தி அதை உள்ளார்ந்த புரிதலுடன் அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் போது அங்கே காதலனாய் கணவனாய் முதலில் ஜெயித்து விடுகிறான்..இந்த புரிதலற்று போவதால் தான் பல கணவன் மனைவி திருமணத்திற்கு பிறகு அவர்கள் காதலை தொலைத்து விடுகின்றனர்..தன் துறையை புரிந்த இணையின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டுமல்ல சிறு பார்வையும் ஒரு தொடுதலுமே போதும் அவன் சோர்ந்த நேரங்களில் அவனுடைய சவால்களில் விண்ணை முட்டி சாதனை படைப்பான்..

மதுரவல்லி பெயரே அத்தனை அழகு செய்யும் தொழில் மேல் கொண்ட பக்தி அதில் உள்ள நேர்மை கண் முன்னே ஒரு மரியாதையான தோற்றத்தை ஏற்ப்படுத்தும் பாத்திரப்படைப்பை அருகில் பார்ப்பது போன்ற உணர்வை தந்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்👏👏
 
தன் காதலை உணரும் போதும் தன் தோழிக்காய் மறைத்து கொள்ள நினைத்து முடியாமல் நான் இத்தனை பலவீனமானவளா என்று நினைக்கும் இடத்தில் மிகவும் அழுத்தமாக நம் மனதில் பதிகிறாள்...ஒவ்வொரு முறையும் அவர்கள் பேசிய இடத்தை நினைவு கூர்ந்து அங்கே நிற்கும் நொடிகளில் மட்டுமே வாழ்வதும் காதல் என்றால் என்ன தன் துணையின் குடும்பம் மட்டுமல்லாமல் அவனின் துறையையும் இலட்சியங்களையும் சேர்ந்தே நேசிப்பது என்பதை அழுத்தமாய் சொல்லும் இடங்களில் இன்னும் அழுத்தமாக நம் மனதில் பதிகிறார்..
 
நாயகன் சொல்லிச்சென்றது போல் தன் காதலை குடும்பத்தினருக்கு வெளிப்படுத்தும் இடத்தில் மிகவும் மரியாதையாய் நம் மனதில் பதிகிறாள்..
ஷோபிதா இன்றைய பள்ளி மாணவி...
 
தன் வயதிற்கே உரிய ஹார்மோன்களின் தூண்டுதல்களால் பதின்ம வயது பெண்களின் செயல்களை கண்முன்னே நிறுத்துகிறாள்...தாயை எதிரி போல பார்ப்பதும் அண்ணனை வேண்டாத விருந்தாளி போல நினைப்பதும் இன்றைய பல பிள்ளைகளின் நிலையை உணர்த்துகிறது..ஒரு அண்ணனாய் தமிழ்ச்செல்வனின் அணுகுமுறை அதற்கு சரியான ஆளாக மதுவை நம்பி அவளிடம் தன் தங்கையின் பொறுப்பை ஒப்படைப்பது இருவரும் இணைந்து தங்கையை அழகாய் மீட்டெடுப்பது ஒரு கை தேர்ந்த மனோதத்துவர் வரிசையில் ஆசிரியர் அழகாய் வழக்கமாய் தன் சமூக அக்கறையை தன் கண்ணியமான எழுத்துக்களால் வெளிப்படுத்தி தன் முத்திரையை மிக அழுத்தமாக பதிக்கும் ஆசிரியருக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👏👏

இங்குள்ள பல வாசகிகள் பதின்ம வயது பெற்றோர்களாக இருந்தால் முடிந்த வரை இந்த அணுகுமுறையை பின்பற்றி நம் குழந்தைகளை மீட்டெடுக்க மிக மிக பொறுமையாய் முயற்சி செய்வோம்..
 
இன்றைய பிள்ளைகளுக்கு தேவை மிகச்சரியான தூண்டுதலே,அவர்களை சரியாக புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தினாலே போதும், அவர்கள் உலகத்திலிருந்து வந்து இயல்பாய் நம்முடன் இணைந்து கொள்வார்கள்..ஆனால் அதற்கு தேவை மிக மிக பொறுமை😊

இன்னும் நிறைய எழுதுங்கள் ஹமிதா..
 
வழக்கம் போல இணையத்தில் இல்லாமல் புத்தகமாக மட்டுமே படிப்பேன்😊😊
 
உங்களின் ஆர்வமும் அதற்கான மெனக்கெடலும் உங்களை பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல வாழ்த்துக்கள் 🌹🌹🌹