Monday, August 28, 2017

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் அபிபாலா அவர்களின் அழகிய கருத்தாக்கம்


ஹாய் ஹமிதா மேடம் .

நீங்கள் 'பேசும் மொழியிலெல்லாம்' மில் பாரதியை.. நேசத்தை...காதலை.. நட்பை..குறையாமல் அள்ளி..அள்ளி..கொடுத்திருக்கிறீர்கள் ...

வெற்றி மாறன்...பாரதியின் வரிகளில் மெய்யுருகிப் போகும் மிஸ்டர். ரைட். இன்டீரியர் டிசைன் மேல் ஈடுபாடு கொண்டு வாழ்வில் அதற்கான மிகச்சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் துடிப்பான ரோஷக்கார இளைஞன்..
தந்தையின் சுடுசொற்களால் காயப்பட்டு...தன் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு.. தந்தையின் நண்பரின் பர்னிச்சர் ஷோரூமில் வேலைக்கு சேர அவன் எடுக்கும் முடிவே அவன் வாழ்க்கையை புரட்டி போடுகிறது..
தன் சீனியர் ஸ்டாஃபாக அறிமுகமாகும் நயனிகாவிடம் மனதை பறி கொடுக்கிறான்.. அவளைத் தன்னோடு இணைத்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றானா... என்பதுதான் ஹமிதா மேடமின் விரல்களின் வழியே இன்று நம் கைகளில் தவழும்...'பேசும் மொழியிலெல்லாம்'..😊😊
 

demonetisation என்ற சூறாவளி நம்மைப் போன்ற சாதாரண மக்களின் இயல்பான வாழ்க்கையை எவ்வாறு புரட்டிப் போட்டது..என்பதை இதைவிட யதார்த்தமான யாரும் சொல்ல முடியாது... கூடவே புயல்.. மழையின் பாதிப்புகளும் நம் கண் முன்னே பயம் காட்டுகிறது..
 

நயனிகாவின் ஹீரோ வெற்றிதான் என்றாலும்... பிக் பாஸாக.. வெளிநாட்டிலிருந்து அதிரடிப்புயலாக நுழைந்து... வெற்றி யிடம் நட்பையும்.. நயனிகாவிடம் காதலையும் ... பெற்றோரிடம் அன்பையும் வேண்டி நிற்கும் .. பிரமோத் தான் டைட்டில் வின்னர் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது..!!😉😉
 

சுயநலத்தின் மொத்த உருவமாக கார்த்திகா.. அப்பட்டமான மிடில் கிளாஸ் ஃபேமலி பெற்றோராக மோகன்ராம்..விஜயா..
 

கண்டிப்பும் சிடுசிடுப்புமாக வீரராகவன்.. சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு கயவர்களால் ஏற்படும் ஆபத்து.. என்று சுவாரஸ்யங்களுக்கு குறைவே இல்லை.. கதைக்கு சுவை கூட்ட ரொமான்ஸை மடியில் கட்டிக் கொண்டு லிஃப்டும் கூடவே பயணிப்பது ரசனை..
 

ஆனா இரண்டு சீன்ல வர்ற தியாகுவுக்கு கூட கலைச்செல்வியை ஜோடி சேர்த்து வச்சிருக்கீங்க.. !! பிரமோத்தை மட்டும் புலம்ப வெச்சு ஏமாற்றத்தை கொடுத்துட்டீங்களே.. இதெல்லாம் செல்லாது.. செல்லாது..!! அதனால இதோட செகண்ட் பார்ட் எழுதறீங்க.. !! சரியா.. இது எங்க ரிக்வெஸ்ட்.. அதுவும் சில பல ரொமான்ஸுடன் ஒரு சூப்பர் டூப்பர் பெண்ணை ஜோடியாக போடறீங்க..!!😁😁 சரி தானே ஃப்ரண்ட்ஸ்.. உங்க கிட்டயிருந்து விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..
 

இந்தக் கதை நம் உள்ளத்தோடு ஒன்றி... உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து எங்கள் அனைவரின் இதயத்தையும் குளிர்விப்பது நிஜம்.. இதன் பிரமாண்ட வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷாஹி... 💖💖

பேசும் மொழியிலெல்லாம் - தோழி ஜென்சி ஜோஸ் மைக்கேல் அவர்களின் கருத்தாக்கம்

பேசும் மொழியிலெல்லாம்

முன்பாதி ஆன்லைனில் படித்தபோதே கவர்ந்த வித்தியாசமான கதா நாயகன் , கதா நாயகி....இன்று மீதியும் வாசித்து முடிக்க என்னில் கலவையான உணர்வலைகளை எழுப்பியது....அந்த உணர்வலைகளிலிருந்து மீளும் முன்பாக கருத்தை பதிவிடவும் தூண்டியது....

குறிப்பிட்ட காலச் சூழலை துளியளவும் பொய்மை கலக்காமல் கதையோட்டத்தோடு கொண்டுச் சென்றிருப்பது மறுபடி அவற்றை நினைவுக் கூறச் செய்து ஏற்படுத்தும் அதிர்வு உணர்வலைகள் ஒரு புறம்.

கார்த்திகாவெனும் எதிர்மறை உணர்வலைகள் ஒரு புறம்,

சூழ்னிலை கைதியான நயனி, கூடவே துன்புறும் அவள் பெற்றோர் , தம்பி இவர்களின் துயர உணர்வலைகள் ஒரு புறம்,

பெண் குழந்தை ஒன்று சிதிலமாக்கப்பட்டு விடுமோவென பயந்து அவ்வாறு நிகழாமலிருந்தமைக்கு கதாசிரியருக்கு நன்றிச் சொல்லத் தூண்டும் உணர்வுகள் ஒரு புறம்,

ப்ரமோதின் அதீத தன்னம்பிக்கை மற்றும் அவனது தந்தையின் அதீத புத்திசாலித்தனம் கொணர்ந்த எரிச்சல் உணர்வு ஒரு புறம்

நயனியின் கையறு நிலையை கண்டுக் கொள்ளாமல் அவளை பலியாக்க துணிந்த குடும்பத்தினர் மீதெழுந்த கோப உணர்வுகள் ஒரு புறம்

தன்னுடைய காதலை அடைய போராடுகின்றவனின் திட்டங்களை திகில் பரவ பார்த்திருந்தது ஒரு புறம்

அவர்கள் காதல் மழையில் நனைந்திருந்த நினைவுகள் ஒரு புறம்...

சிற்சில எதிர்பாரா துன்பங்கள் இக்கட்டுக்கள் தாண்டி சுபமாக கதை நிறைவுற்ற போதோ தித்திப்பான உணர்வலை பரவியது மனமெங்கிலும்...

மிக அருமையான கதை ஹமீதா சிஸ்...

பிரமோத் கணிக்கப்பட இயலாதவன்....அவன் அழும் போது கஷ்டமாக இருந்தது...

அவனுக்காக நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே எனும் ஆதங்கம் தோன்றியது உண்மை.

சில இடங்களை quote செய்ய நினைத்தேன்...இப்போது மொத்த கதையுமே மனதிற்குள் வலம் வருவதால் நியாபகம் வரவில்லை... மறுபடி வாசித்து பின்னர் அவற்றை குறிப்பிடுவேன்... (y)

இன்று உங்கள் கதையை வாசித்ததில் பெரியதொரு விருந்து சாப்பிட்ட களிப்பை உணர்கின்றேன்....

மென்மேலும் பற்பல அழகான படைப்புக்கள் அளிக்க வாழ்த்துக்கள்

யாரைக்கேட்டது இதயம் - எழுத்தாளர் பவித்ரா நாராயணன் அவர்களின் கல கல பதிவு



யாரைக்கேட்டது இதயம் – ஹமிதா aunty

ஒரு Stylish ஆன கதை…இதுவரை இவ்வளவு stylish ஆன கதை யாரும் எழுதல..அப்படியே எழுதியிருந்தாலும் நான் படிக்கல…..சுமந்த் – மை டியர் சுமன்….விக்ரம் கு ஈகுவளா எனக்குப் பிடிச்ச ஹீரோ.ஒன் ஐ சுமன் ஒன் ஐ விக்ரம்…சுமந்த் பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே போகலாம்….ஹேண்ட்சம் stylish…..அண்ட் சோ ஆன்.சமத்தானவன் அதே நேர, சாமர்த்தியமானவன்..வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ள தெரிந்தவன்..அழகான வாழ்க்கையை வாழ்வது வேறு..இருக்கும் வாழ்க்கையை அழகாக்கி கொள்வது வேறு..பிறப்பினால் ஒருவனின் குணம் தீர்மானிக்க படுவதில்லை.ஒருவனின் குணத்தை அவன் தான் தீர்மானிக்கிறான் என்பதை இச்சமுகத்துக்கு உணர்த்துகிறான் சுமந்த் நாராயன்.அவனது பிஎன்ஏ கண்ணுக்கு முன் அழகாய்க் காட்சிப்படுத்திகிறார் ஆசிரியர்….சுமந்த் அவன் வாழ்க்கையை அவனே செதுக்கிய சிற்பி..அதுவும் அழகாய் செதுக்கியவன்/.
 

ஷ்ரேயா அவளது நுண்ணுணர்வுகளை நுணுக்கமாய் படைத்துள்ளார்.எனக்கு பிடித்த வித்த்தில் செதுக்கிய கதாபாத்திரம்.அவளது துணிச்சல் நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
 

அவர்களிடையே எப்படி வந்த்து என்று தெரியாமலே சாரலாய் வருடும் தென்றல்…
 

விவேக் – வினோ ஆத்ர்ச தம்பதி.ஆனா விவேக் பத்தி பேசினா நான் என்ன ஆவேன்னு உங்களுக்கே தெரியும் யுத் மதர்!!..(உங்களுக்கு மனசாட்சியே இல்ல)
 

சமூக கருத்துகளோடு சாரலாய் காதலும் stylish ஆன கதை…சுமந்த் என்னையும் கட்த்திட்டு போகவும்..உங்க கையால் ஜூஸ் குடிக்க ரெடி மை மேன்….
 

பாரதிம்மா-
 

“நான் என்பது உடலானால்
என் கணவர் என்னை காதலிக்கிறார்”
வலி வலி வலி மட்டுமே மிகுந்த வார்த்தைகள்…என்னால தாங்கிக்கொள்ளவே முடில….
 

புவனா- தவறு செய்யாமல் சிலுவை சுமக்கும் சராசரி பெண்.ஷ்ரவனின் மாற்றம் மகிழ்ச்சி.நட்ஸ் சூப்பர்..அச்சிட்டப்பட்ட ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது..ரெஜிஸ்தர் மேரேஜ் பத்தி ஹா ஹா உங்க சேவைக்கு நன்றி aunty..when I think of that ha ha ha ..உங்க க்டமை உணர்ச்சிக்கு அளவே இல்லை.அந்த வில்லங்கம் பிடிச்ச வில்லங்கள் பத்தி பேச விருப்பமில்லை.
 

என் அண்ணாவே மாப்ள பார்க்கும்போது சுமந்த் தான் ஃப்ர்ஸ்ட் சாய்ஸ் சொல்லிட்டேன்…ஆமா உங்க மேனேஜர் தானே கவர் பிக் தீபிகாவை செலக்ட் செய்த்து..ஹா ஹா…

படிக்காதவங்களாம் கண்டிப்பா they have missed a must read story…kudos to ur work aunty.

இப்போ என் இதயம் யாரை கேட்குதுன்னு நான் சொல்லிட்டேன்…சீக்கிரமே ஸ்டார்ட் செய்யவும்.

வித் லவ்(சுமந்துக்கு)
பவித்ரா நாராயணன்

Wednesday, August 16, 2017

தோழி சூர்யமுகி அவர்களின் மின்னஞ்சல் பதிவு



ஹாய் ஹமீதா,             
             உங்கள் கற்பனை என்னும் சோலையில் உதித்த ஐந்தாம் மலரான `பேசும்  மொழியிலெல்லாம்' கதை புத்தகமாக வெளிவந்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
            
தளத்தில் பதிவிடப்பட்ட கதை பாதியில் நிறுத்தப்பட்டதும் சற்று  வருத்தம் ஏற்பட்டது உண்மை...ஆனால் புத்தகமாக  இதனை படிக்கும்  ஆர்வம் நாளுக்கு  நாள் அதிகரித்ததும் உண்மை.ஒருவழியாக புத்தகம் வாங்கி படித்து விட்டேன்.
             
ஹமீதா கதைகளின் நாயகர்களிடமிருந்து சற்று  வேறுபட்டு  வேலையில்லா இளைஞனாக தந்தையிடம் திட்டு வாங்கும் வெற்றிமாறன் .                             வேலைக்காக சென்னை வருமிடத்தில் கதாநாயகி நயனிகாவை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறான்.நாளடைவில் காதல் கொள்கிறான்....
            
நயனிகா...குடும்பத்துக்காக தன் கனவுகளைத் துறந்து மிகப்பெரிய பாரத்தை தன் தலையில் தாங்கி வேலைக்கு செல்லும் பெண்.
        
இவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் முதளாளி மகனாக ப்ரமோத்...வெற்றியின் பால்ய  நண்பன்.
       
இவர்களின் முக்கோண காதல் கதையை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறீர்கள்.
         
இதோடு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள்தமிழக அரசியல் சூழல், புயல் பாதிப்புகள் என அனைவரையும் ஒன்பது மாதங்கள் பின்னோக்கி பயணிக்க வைத்திருக்கிறீர்கள்....
           
பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பற்றிய பகுதியும் மனதை பதைபதைக்க வைத்தது.        
            
வெற்றி நயனியின் காதல் அத்தனை அழகு....கடன் பிரச்சனை தீர ப்ரமோதை மணக்க நிர்ப்பந்திக்கப்படும் நயனி என்ன ஆனாள்....காதலனாய் காவலனாய் வெற்றி அவளை காத்தானா அல்லது தன் காதலை ப்ரமோத்துக்கு தாரை வார்த்தானா என்பதை மிக எதார்த்தமாக கொண்டு சென்ற விதம் அருமை.
                
வெற்றியின் குறும்பு ரசிக்க வைத்தது...ப்ரமோத்தின் இன்னொரு பக்கம் தெரியும் போது சற்று அதிர்ந்தது உண்மை....நயனிக்கு இந்த வாழ்வே மிகப் பொருத்தம்...
               
நடுத்தர வர்க்க குடும்ப தலைவரான மோகன்ராமின் சில முடிவுகளை ஏற்க முடியாவிட்டாலும் கடைசியில் தான் ஒரு பாசமான தந்தை என்பதை அவர் நிரூபிப்பது ஆறுதல்
             
வெற்றியின் தந்தை வீரராகவன், சுயநலத்தின் மொத்த உருவமாக நயனியின் அக்கா கார்த்திகா, அப்பாவி அன்னையாக விஜயா,நண்பர்களான ஆனந்தி தியாகு,ப்ரமோத்தின் தந்தை பத்மநாபன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. ...
            
மொத்தத்தில் எதார்த்தமான அழகான காதல் கதையை தந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
                விரைவில் உங்கள் ஆறாம் படைப்போடு எங்களை சந்திக்க வாருங்கள்.

Monday, August 7, 2017

யாரைக்கேட்டது இதயம் - விமர்சனம் (எழுத்தாளர் நீலாமணி)

Thanq hameeda. 
 
உங்க 'யாரைக்கேட்டது இதயம்' புக் தான் இன்னைக்கு படிச்சேன். எப்பவுமே language மேல உங்களுக்கு இருக்கற command எனக்கு ரொம்ப பிடிக்கும். Both Tamil and English. அதோட இதுல எனக்கு பிடிச்ச விஷயம்
 
1. கதைக்களத்தை நல்லா ஸ்டடி பண்ணிருக்கீங்க.

2. எல்லா கேரக்டர்சும் செதுக்கி இருக்கீங்க.

3. ஹெவி பிளாட் கொஞ்சம் கூட குழப்பம் இல்லாமல் குடுத்திருக்கீங்க. I enjoyed a lot.
 
4. டீசண்ட் ரொமான்ஸ்.
 
5. மைல்ட் த்ரில்லர் ரொம்ப அழகா ஹாண்டில் பண்ணிருக்கீங்க.
 
6. ஒரு செகண்ட் கூட போரடிக்காத ரைட்டிங் ஸ்டைல்.
 
கடைசியா உங்களுக்கு ஒரு வார்னிங். உங்க மேல expectations கூடிட்டே போகுது. டேக் கேர்.

Expecting many more such beautiful novels from you pa.

Sunday, August 6, 2017

நண்பர்கள் தின வாழ்த்துகள்!


எழுத்தின் வாயிலாக நட்பாகி, பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் மிக ஆவலுடன் வாசித்து,  அழகிய நுட்பமான கருத்துகள் வாயிலாக எனது எழுத்தை செதுக்கி, நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்... எனது ஒவ்வொரு சிறு முயற்சியிலும் உடன் பயணிக்கும் அன்புத் தோழமைகளின் நட்பை எனக்கு அருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

'இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!'

Thursday, August 3, 2017

தோழி எழுத்தாளர் கோகிலா அவர்களின் அழகிய கருத்தாக்கம்

ஹாய் ஷாஹி,

வழக்கம் போல் 'வாவ்' தான் கதை. உங்க முதல் கதையிலேயே செமயா இம்ப்ரஸ் ஆகியிருக்கேன். அதைவிட ஐந்து மடங்கு இம்ப்ரஸ் ஆனேன்னு சொல்லலாம் உங்க ஐந்தாவது படைப்பில். Awesome shahi.

வெற்றி, பிரமோத் அறிமுகப் படலத்தில் இருவரும் வேலையில்லா பட்டதாரி தனுஷ், அமிதேஷா என் மைன்ட்ல வந்து.. போகப் போக(3, 4 எபியிலேயே) மைன்ட்டை நல்லா சர்ஃப் போட்டு வாஷ் பண்ணி ஹமீதாவிற்கே உரிய தனித்துவமான கேரக்டர்களான வந்துட்டாங்க... வெற்றி-ப்ரமோத் நட்பு, வெற்றி-நயனி காதல் இது இரண்டிலுமே எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நினைத்து அடுத்து என்ன? அடுத்து என்ன? எதிர்பார்ப்போட ஒவ்வொரு பக்கங்களா திருப்ப வைத்து.. ரொம்பவே விறுவிறுப்பா கதை நகர்ந்தது.

இரண்டு ஹீரோ இருக்கும் போது யாரவது ஒருவருடைய கேரக்டர் தான் நம்மளை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணும். பட் இதில் இரண்டு பேருமே நம்ம மனதுக்கு மிக பிடித்தமான கேரக்டர்களாக வந்தது ஹமீதாவின் எழுத்து திறமைன்னு தான் சொல்வேன். மனதை வருடும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கதை சொல்லியதும் செம செம செம சூப்பர்.

அடுத்து நம் அரசால் நாம் சந்தித்த பிரச்சனைகளை ரொம்பவே எதார்த்தமா கதைக்குள் கொண்டு வந்துட்டீங்க. எந்த பிரச்சனைகளையும் விட்டு வைக்கல.. ஹாஸ்பிட்டல் பில், மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டு பணமில்லாமல் கஷ்டப்பட்டவர்கள், கருப்பு பணத்தை மாற்ற நினைத்தவர்கள் இப்படி ஒரு விஷயத்தை விடாமல்.. நவம்பர் 8 ல இருந்து ஜனவரி என்ட் வரை தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் கதைக்குள் கொண்டு வந்தது.. ப்ரில்லியண்ட் ப்ரசன்டேஷன். சில பேச்சிலர்ஸால் வரும் பிரச்சனைகள்.. பீக் அவர்ஸ் லிஃப்ட் பிரச்சனை எல்லாம் யதார்த்த உலகத்தை ஸ்டாராங்கா எங்களுக்கு காட்டியது. ப்ரமோத் & வெற்றி, நயனி, லிஃப்ட் இப்படி ஆர்டர்லதான் 'பேசும் மொழியெல்லாம்' என் மனதில் பதிந்தது.

ஒவ்வொரு கதையிலும் உங்களை பாராட்டி பாராட்டி புதுசா என்ன பாராட்டுறது வார்த்தைகள் கிடைக்கல போங்க.. நான் படித்ததிலேயே உங்கள் எழுத்து ஓரிடத்தில் நிற்காமல் கதைக்கு கதை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படியே நாளுக்கு நாள் வளர்ந்து இன்னும் ரீச் ஆகாத ஒரு சில வாசகர்களையும் சென்றடைந்து, எப்பொழுதும் இந்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

தோழி Kavi Rehabian அவர்களின் விமர்சனம்



ஹமீமா இது என்னுடைய முதல் விமர்சனம்.

முதலில் எனது இதயம் கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். இந்தக் கதைக்கும் புத்தகம் என் கையில் கிடைக்க உதவி செய்ததற்கும்.
எனது மொழியில் பேசும் மொழியிலெல்லாம்...

இந்தக் கதையின் முதல் வெற்றி நம் எதிர் நடமாடம் மனிதர்களின் பிம்பங்கள் வெற்றியும் நயனியும்....

ஏதோ ஓர் வகையில் பாரதி எல்லார் வாழ்க்கையிலும் தொட்டுக்கொண்டிருப்பார் நேரடியாகவோ, மறைமுகமாகவோ. அப்படி பாரதியைக் கொண்டாடும் நாயகனாக அறிமுகம் ஆகும் வெற்றி கதையின் நாயகன்.

கனவுகளை குடும்பக் கஷ்டங்களுக்கு முட்டுக் கொடுக்க விட்டு முன்னோக்கி வாழ்வில் ஓடும் பெண்களில் ஒருத்தி நயனி.

அனைத்தும் இருந்தும் ஏதுமில்லா உணர்வில் வாழும் பிரமோத்.
இவர்களது வாழ்வின் முக்கியத் தருணங்களை எட்டிப் பார்க்கிறோம் இக்கதையில்.

தமிழ்நாடு மக்கள் கடந்த ஒரு வருசத்தில் எத்தனை பிரச்சனைகளை சமாளித்து வந்துருக்கோம் இதை படிக்கும் போது தான் புரியுது.
எதார்த்தமான வாழ்வின் நிகழ்வுகளை உள்வாங்கி இயல்பாக வடிமைத்ததால் மனதிற்கு நெருக்கமாகிறார்கள் வெற்றியும் நயனியும். வெற்றியின் குற்ற உணர்வும் பதட்டமும் படிப்பவர்களுக்கும் வருவதே இந்தக் கதையின் வெற்றி

நல்வாழ்த்துக்கள்! ஹமீதா 

எழுத்தாளர் நீலாமணி அவர்களின் பின்னூட்டம்

Hi Hameeda, நான் உங்க பேசும் மொழியிலெல்லாம் கதை இப்ப தான் படிச்சிட்டு வரேன். எனக்கு எப்பவுமே உங்க writing style பிடிக்கும். இதுலயும் அசத்திட்டீங்க. எனக்கு இந்த கதையை படிச்சதும் நீங்க எழுத்தில் அடுத்த கட்டத்துக்கு போயிட்டமாதிரி தோணிச்சு. வெறும் லவ் ஸ்டோரியா மட்டுமே இல்லாமல் பல விஷயங்களை தொட்டிருக்கீங்க. பர்னீச்சர் கடை, demonetisation, ippadi ellame super. My best wishes to you and thanks for your wonderful gift. I loved it.ore oru kurai. Pramodai allaada vittathu than.