Monday, January 15, 2018

நிழல் போலவே நின்றாய் - ஜென்சி ஜோஸ் அவர்களின் விமர்சனம்

நிழல் போலவே நின்றாய்:

நாயகனுக்கான கதை

ஆனால் கதை நாயகி ....மனதில் நங்கூரமிட்டு அமர்ந்து விட்டாள்...என்ன ஒரு வித்தியாசமான பிரச்சனை அவளுக்கு....அவளுடைய பிரச்சனைகள், குணாதிசயங்கள் இவற்றை நேர்மறையாக அணுகிய விதத்தில் கதாசிரியருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டியது தேவையாகின்றது.

நீயும் நானும் படிப்பில் முதன்மை பெற்றவர்களல்ல...ஆனால், அதுவே நம் வாழ்வின் வெற்றியை தீர்மானிப்பதல்ல என்பதான ஒரு உரையாடல் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது...அது மட்டுமா இன்னும் நிறைய விஷயங்கள்...

ஹீரோ சர் பற்றி ....இதோ சொல்ல வருகிறேன்...

தமிழ் படங்களில் ஹீரோ சாருக்காக கதை/ பாடல் எல்லாம் எழுதுவார்கள்...கதை உலகில் இவர் அப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ
இவருக்காகவே ஹமீதா சிஸ் கதை எழுதி இருக்கிறார்களே....அதிர்ஷ்டகார பிரமோத்..

அவனுடைய முரணான ( மாறிக் கொண்டிருக்கும் ) குணாதிசயம் முதல் கதையிலேயே நெருடியது ..

ஆனால் அதை அப்படியே இந்த கதைக்குள் கொண்டு வந்த விதம் பிரமாதம் சிஸ்...

இன்னும் என்னென்னவோ சொல்லத் தோணுகிறது ...கதை வாசித்ததன் நிறைவை அப்படியே உணர்ந்துக் கொண்டு இருக்கிறேன்...

சென்னை டூ மும்பை வரும் பயணத்தை சுவாரஸ்யமாக்கியமைக்கு மற்றொரு முறை நன்றி

நல்வாழ்த்துக்கள்

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்

No comments:

Post a Comment