Wednesday, September 6, 2017

பேசும் மொழியிலெல்லாம் - செல்வராணி ஜெகவீரபாண்டியன் அவர்களின் விமர்சனம்



பேசும் மொழியில் எல்லாம் ....

இந்த புத்தகம் கைக்கு வருவதட்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது! லைப்ரரியில் முன்னாடியே புக் பண்ணி வைத்து வாங்கினேன்!!

ஹமீதா இந்த கதையை ஆரம்பிக்கும்போதே எனக்கு இந்த கதையில் அவர்கள் சமீப கால நிகழ்வுகளை கோர்த்து எழுதுகிறார்கள் என்று பெரிய ஒரு ஆர்வம் இருந்தது.நாம் அனைவருமே அனுபவித்த பிரச்சினைகளை அவர்கள் தொடும்போதே நாம் கதைக்கு நெருக்கமாகி விட்டோம்!ரூபாய் நோட்டு செல்லாததில் தொடங்கி,முதல்வர் மரணம், சென்னையில் வந்த வெள்ளம் ,ஒரு புறம் மக்கள் பணம் எடுக்க வரிசையில் நிட்பது, அதே நேரம் சிலர் வேகம் வேகமாக நகைகளும் பொருட்களும் வாங்கி குவிப்பது , சாதாரண மக்கள் வீட்டில் சேமித்து வைத்து இருந்த சேமிப்புகள் எல்லாம் வெளியே எடுத்து கரைத்தது என்று
நம் மனதில் தோன்றிய அணைத்து விஷயங்களையும் அருமையாக கதையின் ஓட்டத்திலேயே உறுத்தாத வண்ணம் எழுதியதட்கே ஒரு பெரிய சபாஷ்!!!

கதை பற்றி .....நடுத்தர வர்க்கத்துக்கே உரிய கஷ்டங்கள் நிறைந்த குடும்பம்,சுயநலம் மிக்க கார்த்திகா ஒரு புறம் ,பெற்றவர்களின் நிலை அறிந்து தன தலை மேல் பாரம் சுமக்கும் நயனி,.படிக்கும்தம்பி, பரிதாப அப்பா பாவப்பட்ட அம்மா...இவர்களுடன் நம் நாயகன் வெற்றி!!எப்படிப்பட்ட ஒரு அருமையான கதா பாத்திரம்!! சொந்த முயட்சியில் ஒரு தொழில் ஆரம்பிச்சு அது சரியா போகாத விரக்தியில் இருக்கும்போது அப்பாவின் ஏச்சுக்களும் பேச்சுக்களும் அவனை சென்னை நோக்கி இழுத்து வருகிறது.அங்கு அவன் இறங்கும்போதே பணம் செல்லாத செய்தியுடன் தான் இறங்குகிறான்!!நயனுக்கு போன் செய்ய வேண்டிய சூழ்நிலை,நிட்பதுவே நடப்பதுவே பாடல் ரிங் டோன்லயே அவன் பிளாட்!!!அன்றைய இரவில் அவளின் குடும்பம் செய்யும் உதவிகளை வேறு வழியின்றி அவன் ஏற்று கொள்கிறான்!!அவளின் தலையசைப்பில் விழுபவன்தான்!!! பின் எழவே இல்லை!!!

நயனியும் அவனின் ரிங் டோனில் ...காக்கை சிறகினிலே நந்தலாலா...கவரப்படுகிறாள்..அனால் ஹமீதா அதை எழுதல!!நானே அப்படி நினைச்சுக்கிறேன்!!இருவரும் சேர்ந்து வேலை பார்க்க நேரிடுகிறது..ப்ரமோதின் வருகை, அவன் ஒரு ஸ்பாயில்ட் சைல்டு ஆகத்தான் என் கண்ணுக்கு தெரிகிறான்!!தன மீது உள்ள ஒரு கர்வம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்...நயனின் மீது ஆசைப்படுவதும் அது நடக்கவில்லை என்று அறிந்ததும் வெளியே இயல்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளே உடைந்து அழுவது...அசத்தலான கதாபாத்திரம்!!

அந்த லிஃப்ட் !! நான் கூட அதை ஒரு பொருட்டா நினைக்கவே இல்ல!!
அதில் இப்படி ஒரு காதல் பயணத்தை எதிர் பார்க்கல!! வாவ் ஹமீதா!!!கதையின் ஒரு பாத்திரமாகவே மாறி விட்டது!!என்ன ஒரு அழகான காதல் சிருங்காரங்கள்!! வெற்றியின் மைண்ட் வாய்ஸ் ...சான்ஸே இல்ல!! எனக்கு ரொம்ப பிடிச்சது...மாம்பழம் பார்த்திருக்கேன்,நல்ல அல்போன்சா மாம்பழத்தை ப்ரூட் கார்விங்க்ல ரோஜா பூவா செஞ்சு அதுக்கு கொஞ்சம் மல்லைகை பூவை வெச்சு விட்டா எப்படி இருக்கும்ன்னு இப்போதான் பார்க்கிறேன்!!!....சூப்பர் ஹமீதா...

கார்த்திகா மாதிரி பெண்களை என்ன சொல்றது??இன்னும் அவளுக்கு இவர்களின் காதல் புரியவே போவதில்லை..தான் தன சுய நலம் என்று இருக்கும் பெண்களையும் நாம் பார்க்கிறோமே!!யாருக்கும் தெரியாமல் அவர்களின் திருமணம் நடக்கும் வரை நம்மை ஒரு திகிலுடன் படிக்க வைக்கிறது கதை...பாவம் பிரமோத், காதல் சொல்ல நினைக்கும் போதே அவள் கர்ப்பம் பற்றி அறிய நேர்கிறது..அவன் அந்த சூழ்நிலையை கையாளும் விதம் அட சொல்ல வைக்கிறது!!வில்லன் என்று நாம் நினைத்த நேரத்தில் அவன் ஒரு அழகான மனிதனாக நம் கண்ணுக்கு தெரிகிறான்!!

ஆனாலும் அந்த கிட்சன் சீன இல்லேன்னா நாங்க உங்களை கும்மிதான் எடுத்துருப்போம்!!அதுக்கே உங்களுக்கு என் பாராட்டுக்கள் ..வாழ்த்துக்கள் ஹமீதா ...அடுத்த கதையுடன் வாங்க...நானும் இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டேன் என்பதை பெருமையாக கருதுகிறேன்!!