Monday, January 15, 2018

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் பவித்ரா நாராயணன் அவர்களின் விமர்சனம்

வெற்றி வெற்றி வெற்றி..!!!...என் கனவுகளின் நனவாய்….! நிழலின் நிஜமாய்….!!இப்படி இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்னு ஆசையை அழகா கவிதையாக சொல்லிடீங்க….சுமந்த ஆக்ஷன் ஹீரோன்னா…வெற்றி திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க கூடிய ஒருத்தர்……….அதுவும் என் ஊர்ர்கார அண்ணாவாக(இந்த இட்த்துல எல்லாரும் ஷாக் ஆவீங்கனு தெரியும்….ஆனா வேற வழியில்லை…என்னதான் 233 பேஜ் வரைக்கும் வெற்றி மீது லவ்வோ லவ் இருந்த போதிலும் வெற்றி எனக்கு அண்ணா முறையானதா ப்ரமு செல்லம் மாமா முறையாவர்…அதான்) போயிட்டார்……அன்னிக்கு அந்த கதை படிச்சு நான் எவ்வளவு ஹாப்பி பரவசம்னு வார்த்தையால சொல்ல முடியாது….ரஞ்சுவோட காதை பஞ்சர் ஆக்கிட்டேன் நான்….ஆனா அந்த துரோகி நான் ஊர்ல இருந்த நேரமா பார்த்து என் ப்ர்மோதுக்கு பட்டா போட பார்த்திருக்கா…சில்லி கேர்ள்..ப்ரமோதை நான் கரெக்ட் செஞ்சு பல நாள் ஆகுதே..எனக்கு ஒரு கதை படிச்ச உணர்வே இல்லை….ஒரு கவிதை..திரும்ப திரும்ப படிக்க வைக்கிற ஒரு அழகியல்…மிக மிக மிக எதார்த்தமாக உள்ள ஒரு கதை..அதுவும் ரசனையாக இருந்த கதை……இது வரலாற்று நாவல் இல்லனாலும் வரலாறாகும் ஒரு நாவல் தான்..கண்டிப்பா.DEMONITISATION பத்தி அவ்வளவு எதார்த்தமா பட்ட பாடுகளை தெளிவா சொல்லியிருக்கீங்க….அப்புறம் ரகு ப்ரீத்தி பாப்பா விசயம் இதயம் நின்று துடித்த்து…..சமூக சீர்கெட்டை அழுத்தமாய் மனதில் பதியும் வகையில் அழுத்தம் தராத வகையில் படைத்திருப்பது அழகு..பேரழகு…!! லிஃப்ட் சின்னத்தில் நிற்கும் வெற்றிக்கு நான் ஓட்டு போடுறேன்…வெற்றிமாறன் போல் ஒரு ஹீரோவை நான் இதுவரை எக்கதையிலும் கண்டதில்லை…அவ்வளவு ஸ்வீட்……அதுவும் அவன் பாரதியை ரசிக்கிற இட்த்துல நான் வெற்றியை ரசிச்சேன்….அவன் நயனிகாவை விரும்பது கவிதை..நயனியை ரொம்ப பிடிச்சது….அந்த பெண்ணொட பொறுமை……தியாகம் எல்லாமே சூப்பர்….கார்த்திகா….சைத்தான் கி பச்சா….! முன்பெல்லாம் பெண்களை வில்லிகளாக சித்தரித்தாள் கோவம் வரும்..ஆனால் இப்போது அப்படிப்பட்ட பெண்களை நானே பார்ப்பதால் கோவமும் இல்லை கோவக்காயும் இல்லை..என்ன பெண் என்று தான் நினைக்க தோன்றியது..ஆனால் அப்ப்டிப்பட்ட சுய நல வாதிகள் உள்ளார்கள் என்பது நிதர்சனம்…!!ப்ரசாந்த் நல்ல புள்ள…..மோகன்ராம் சராசரி தந்தை.கடைசில கடனை அடைப்பது மகிழ்ச்சி….நயனியோட தலையசைப்பில நானும் விழுந்துட்டேன்…….கவித்துமான ஒரு காதல் கதை இது…ப்ரமோத் உன்னதம் பேரின்பம் பேரான்ந்தம் எல்லாமே என்ர மாமனுக்குக்குதான் பொருந்தம்..எனக்கு பிடித்த இரு உள்ளங்களுக்கு என்னால் சிறு வலியும் வரக்கூடாதுன்னு நினைக்கிற அந்த பரந்த மனசு…….மனுசன் டா நீ…பெரிய மனுசன்……..எனக்கு வேற பொண்னை நினைச்சாலே பிடிக்காது…..ப்ரமோத் என்னதான் பெரிய ஆளா இருந்தாலும் பெருசா கவரல…..ஆனா அன்டஹ் 236 ஐ திங்க் சோ அங்கேயே மொத்தமா என் இதயம் அவன் வசத்தில்..சோ கரெக்டா என் செல்லத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள்…..இல்லாவிட்டால் பின்விளைவுகள் பயங்கரம் aunty….அதுவும் ரஞ்சிக்கு தரேன்னு எப்படி சொல்வீங்க….?....அப்புறம் aesthetic sense ல எனக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் வேணும்….அதை நினைவில் வைச்சிக்கோங்க…….மஞ்சள் தண்ணீர் வரும் மெட்ரோ வாட்டராகட்டும்……..மொத்தமாக சென்னையை அலசி வீட்டீர்கள்..ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்டாக இருக்கும் என்னை சீக்கிரமாக கூல் கூலர் கூலஸ்டாக மாற்றி விடுங்க..சீக்கிரமே ப்ர்மு புக்கா வரனும்..ரொம்ப ரொம்ப ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் தீவிரமான தீவிர்வாதி காதலியோட கட்டளை…அண்ட் தஞ்சாவூர் பசங்க எப்போவுமே தங்கமான பசங்க தான் வெற்றியும் சரி ப்ரமோதும் சரி..இந்த ரைட்டர் மக்களெல்லாம் எப்போவுமே மதுரைபாய்ஸ் வைச்சு எழுதுவாங்க....நீங்க மாத்தியெழுதியதற்கு மிக்க நன்றி.இன்னும் இன்னும் பெஸ்டாக கதைகள் தர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்….அதுவும் எல்லா ஹீரோவையும் உரிமையை எனக்கே தர வேண்டும்….செம கதை..சான்சே இல்லை..படிக்கலன்னா அவங்களாம் நைட் சாப்பிடவே கூடாது….மீண்டும் அடுத்த மாசம் படிக்க போறேன் நானு….
பேசும் மொழியெல்லெல்லாம் இதயத்தோடு இதமாக இசையாக பேசி செல்கிறது….உங்க கதையைப் படிப்பது பேரான்ந்தம்னா ரிவியு போடறது பரமான்ந்தம்….
ப்ரியங்களோடு
பவித்ரா நாராயணன்.
Image may contain: 2 people, text

No comments:

Post a Comment