Monday, January 15, 2018

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் வேதா கெளரி அவர்களின் விமர்சனம்

வாழ்வின் எல்லை வரை நீ வருவாய் என்று
நீயோ அரை வழியில் நன்றி சொல்லி விடை பெறுகின்றாய்.... என்னை ஏமாற்றிவிட்டு எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும் என்றாலும் எதிர்பார்க்கிறேன் – ... இது பிரமோத் என்பவனின் தன்னம்பிக்கையா ..? இல்லை அவள் மேல் கொண்ட காதலின் நம்பிக்கையா ...? வென்றதா ...? வேரறுந்ததா...?

விழிகள் சண்டையிட்ட வெட்கத்தில்
மொழிகள் சொல்லிருந்தும் ஊமையானது
என்னவளின் சிறு தலையசைப்பு
எனக்குள் ஆயிரமாயிரம் புதுக்கவிதைகளை உதயமானது .... அவள் காதலை சொல்லியதே இல்லை--ஆனால். எனக்காக செய்யும் ஒவ்வொரு செயலிலும் காதலின் பிரதிபலிப்புகள்... வெற்றிமாறனின் புதுக்கவிதைகள் பேசும்மொழியானதா ...? ஊமை மொழியானதா ...?


கூட்டத்தில் இருந்தாலும்
தனித்து இருந்த என்னையும்
என் சோகங்களையும் சுகமாக்கியவன் நீ
வீழ்ந்து போக இருந்த என் வாழ்வினை
விரல் கொடுத்து காத்தது உன் காதல் தான் ... என்ற சொல்லும் நயனிகாவின் வாழ்வில் வசந்தத்தை வீசியது பிரமோத்தின் காதலா...? இல்லை வெற்றிமாறனின் காதலா ..?

இந்த கேள்விகளுக்கு விடை தோழி ஹமீதா அவர்களின் படைப்பான “ பேசும்மொழியெல்லாம் “ என்னும் நாவலில் உள்ளது ....
லிப்ட் சீன் பத்தி சொல்லலை அப்படின்னா சாமி குத்தம்மா போய்டும்...அது என்னன்னு படிச்சு தெரிஞ்சுகோங்க ...இனி லிப்ட்ல போகும் போதெல்லாம் அது தானே நியாபகம் வரும் .....

பணமதிப்பு இழப்பு, பரிவர்த்தனை மாற்றம் ,அரசியல் சூழ்நிலை ,வர்தாபுயல் இப்படி மக்களை சுழன்று அடித்த அத்தனை நிகழ்வுகளையும் அழகாக கதைக்களமாக மாற்றி அருமையான நாவலாக கொடுத்துள்ளார் ...வாழ்த்துக்கள் தோழி ஹமீதா ...

No comments:

Post a Comment