Sunday, January 12, 2020

சென்னை புத்தகக் கண்காட்சி

வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்!
சென்னை புத்தகக் கண்காட்சியில் எஸ்.எஸ் பதிப்பக புத்தகங்கள் கீழ்க்கண்ட அரங்கங்களில் கிடைக்கும் என்பதை அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!
பிரியா நிலையம் அரங்கம் எண் 280
அருண் பதிப்பகம் அரங்கம் எண் 292
நியூ புக் லேண்ட்ஸ்
(நர்மதா பதிப்பகம்)அரங்கம் எண் 374/75
நாதம் கீதம் புக்ஸ்
எமது பதிப்பக புத்தகங்களுக்கு வாசகர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நல்லாதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
என்றென்றும் அன்புடன்
ஹமீதா
எஸ். எஸ். பப்ளிகேஷன்ஸ்



Friday, January 3, 2020

நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு! - ஹமீதா



தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
நலம் தானே நட்புகளே!
'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' - ஹமீதா
சென்னை புத்தகக் கண்காட்சியில்...
ஆதித்யன் அருணாச்சலம் அனாயாசமாகக் கையாளும் கூடைப்பந்தைப் போலவே, இக்கதையை வாசிக்கவிருக்கும் வாசகர்களும், மயக்கத்திலிருக்கும் வஸ்துவைப் போல இக்கதையினுள் நுழைந்து வெளியே வர என்னுடைய அன்பான வாழ்த்துகள்!
===========================================
“ரோஜா! ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு! கொஞ்ச நேரம் விளையாடினா தான் என் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். நாம பேசலாம்... ஜஸ்ட் டென் மினிட்ஸ்!” என்று சொல்லிவிட்டு கோர்ட்டை நோக்கி ஓடினான்.
மிகுந்த காதலுடன் அந்த ஆரஞ்சு வண்ணப் பந்தை கையில் எடுத்துக் கொண்டான். அவனுடலின் ஒவ்வொரு செல்லிலும் உற்சாகம் ததும்பி வழிந்ததை அவளால் தரிசிக்க முடிந்தது.
“ஜீசஸ்! ஹவ் மச் ஹி லவ்ஸ் தி கேம்!” அவளுடைய உதடுகள் தன் போக்கில் முணுமுணுத்தன.
அந்தப் பந்து அவனுடைய கைகளில், அவன் சொன்ன சொல்லைத் தட்டாமல், சமத்துக் குழந்தையைப் போல அடிபணிவதையும், கிட்டத்தட்ட ஒரு செப்பிடு வித்தைக்காரனைப் போல அவன் அதனை ஆட்டி வைப்பதையும் வழக்கமான ஆச்சர்யத்துடனே பார்த்திருந்தாள் மெலனி.
அனாயசமாக பாலை ட்ரிபிள் (dribble) செய்தபடியே தன்னுடைய நீளமான கால்களால் ஓடியவன், க்ஷண நேரத்தில் நூற்றெண்பது டிகிரி கோணத்தில் திரும்பி சட்டென்று பந்தை, கூடையை நோக்கி வீசினான். அது ஏதோ மயக்கத்திலிருக்கும் வஸ்துவைப் போல கூடைக்குள் நுழைந்து வெளிவந்தது.
===============================================
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
என்றென்றும் அன்புடன்
ஹமீதா