Monday, July 31, 2017

தோழி ஸ்ரீமதி கோபாலன் அவர்களின் விமர்சனம்



பேசும் மொழியெல்லாம்

ஹமீதா அவர்களின் நாவல் வரிசையில் ஐந்தாவது நாவல்....எப்பொழுதும் போல் அருமையான காட்சிகள் , அழகான வார்த்தைப் பிரயோகங்களால் படிப்பவர்களை கட்டிப் போடுகிறார் .

வெற்றிமாறன் - நயனிகா

கதையின் நாயகன் , நாயகி ...இவர்கள் வரும் காட்சிகள் அனைத்திலும் ஹமீதாவின் தனி முத்திரை ....

பிரமோத்

வெற்றி கதையின் நாயகன் என்றாலும் ....என்னைப் பொறுத்தவரை கதாநாயகனாக என் மனதில் உயர்ந்து நிற்பது இவன்தான்...
மற்றபடி சாதாரண குடும்பம்...அவர்களின் அன்றாட பிரச்சனைகள் .....அவர்களின் தினப்படி போராட்டங்கள்.....

கூடவே கதையோடு ஒட்டி வரும் இன்றைய சமூகப் பிரச்சனைகள் பண மதிப்பிழப்பால் .....மக்கள் சந்தித்த பிரச்சனைகள்.....இயற்கை சீற்றத்தால் மற்றும் பல நிகழ்வுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் .... கூடவே இன்று தினமும் கேள்விப்படும் சிறுவர்களின் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமை .... அதனால் பாதிக்கப் படுபவர்களின் உணர்வுகளை கதை ஒட்டதோடு பொருத்தி கொண்டு சென்றிப்பது அழகு .

கதையில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் உண்டு ....மொத்தத்தில்
ஹமீதாவின் மற்றொரு அழகான நாவல் பேசும் மொழியெல்லாம் .....நன்றி ஷாஹி உங்களுக்கு ...

3 comments:

  1. கதாபாத்திரங்களின் தன்மைகளை மிக அழகாக மட்டுமல்லாமல் ஆழமாகவும் அலசும் ஆற்றல் கொண்ட ஸ்ரீமதி அவர்களின் கருத்துகள் மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு. அழகிய விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றிகள் ஸ்ரீமதி.

    ReplyDelete
  2. ஹாய் ஷாஹி,

    வழக்கம் போல் 'வாவ்' தான் கதை. உங்க முதல் கதையிலேயே செமயா இம்ப்ரஸ் ஆகியிருக்கேன். அதைவிட ஐந்து மடங்கு இம்ப்ரஸ் ஆனேன்னு சொல்லலாம் உங்க ஐந்தாவது படைப்பில். Awesome shahi.

    வெற்றி, பிரமோத் அறிமுகப் படலத்தில் இருவரும் வேலையில்லா பட்டதாரி தனுஷ், அமிதேஷா என் மைன்ட்ல வந்து.. போகப் போக(3, 4 எபியிலேயே) மைன்ட்டை நல்லா சர்ஃப் போட்டு வாஷ் பண்ணி ஹமீதாவிற்கே உரிய தனித்துவமான கேரக்டர்களான வந்துட்டாங்க... வெற்றி-ப்ரமோத் நட்பு, வெற்றி-நயனி காதல் இது இரண்டிலுமே எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நினைத்து அடுத்து என்ன? அடுத்து என்ன? எதிர்பார்ப்போட ஒவ்வொரு பக்கங்களா திருப்ப வைத்து.. ரொம்பவே விறுவிறுப்பா கதை நகர்ந்தது.

    இரண்டு ஹீரோ இருக்கும் போது யாரவது ஒருவருடைய கேரக்டர் தான் நம்மளை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணும். பட் இதில் இரண்டு பேருமே நம்ம மனதுக்கு மிக பிடித்தமான கேரக்டர்களாக வந்தது ஹமீதாவின் எழுத்து திறமைன்னு தான் சொல்வேன். மனதை வருடும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கதை சொல்லியதும் செம செம செம சூப்பர்.

    அடுத்து நம் அரசால் நாம் சந்தித்த பிரச்சனைகளை ரொம்பவே எதார்த்தமா கதைக்குள் கொண்டு வந்துட்டீங்க. எந்த பிரச்சனைகளையும் விட்டு வைக்கல.. ஹாஸ்பிட்டல் பில், மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டு பணமில்லாமல் கஷ்டப்பட்டவர்கள், கருப்பு பணத்தை மாற்ற நினைத்தவர்கள் இப்படி ஒரு விஷயத்தை விடாமல்.. நவம்பர் 8 ல இருந்து ஜனவரி என்ட் வரை தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் கதைக்குள் கொண்டு வந்தது.. ப்ரில்லியண்ட் ப்ரசன்டேஷன். சில பேச்சிலர்ஸால் வரும் பிரச்சனைகள்.. பீக் அவர்ஸ் லிஃப்ட் பிரச்சனை எல்லாம் யதார்த்த உலகத்தை ஸ்டாராங்கா எங்களுக்கு காட்டியது. ப்ரமோத் & வெற்றி, நயனி, லிஃப்ட் இப்படி ஆர்டர்லதான் 'பேசும் மொழியெல்லாம்' என் மனதில் பதிந்தது.

    ஒவ்வொரு கதையிலும் உங்களை பாராட்டி பாராட்டி புதுசா என்ன பாராட்டுறது வார்த்தைகள் கிடைக்கல போங்க.. நான் படித்ததிலேயே உங்கள் எழுத்து ஓரிடத்தில் நிற்காமல் கதைக்கு கதை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படியே நாளுக்கு நாள் வளர்ந்து இன்னும் ரீச் ஆகாத ஒரு சில வாசகர்களையும் சென்றடைந்து, எப்பொழுதும் இந்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete