Monday, October 8, 2018

வாசகி கீர்த்தி அவர்களின் மின்னஞ்சல் பகிர்வு


யாரைக்கேட்டது இதயம்?

ஆரம்பமே அசத்தல்.. PNA நியுஸ் ஹெட், சுமந்தின் வலைப்பதிவிற்க்கு வருகிறது ஒரு தகவல்.. பாரதி என்ற புனைப் பெயருடன்,     

சில உண்மை சம்பவங்களை மைய்யமாகக் கொண்டு ஒரு தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் முதல், வாரம் இரு பதிவுகள் பதிவிடத் திட்டமிட்டிருக்கிறேன்.தனி மனித ஒழுக்க சீர்கேட்டினால் குடும்பம் முதல் சமூகம் வரை எவ்வாறு நேரடி... மறைமுக பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதே இத்தொடரின் மைய்யக் கரு.”

சுமந்த்தை வாசிக்க சொல்லி அழைப்பு விடுக்கிறாள் பாரதி.. இதிலிருந்து தொடங்குகிறது கதை.. தன் வாழ்வில், நடந்த கசப்பன சில சம்பவங்களை அவந்திகாவின் வாயிலாக கதையைத் துவங்குகிறார் பாரதி.. கதையின் வாயிலாக அவர் கொடுக்கும் சில தகவல்கள், எங்கோ நேர்மையாக பணியாற்றும் ஒருவரின் உயிரை காப்பாற்ற பயன் பட்டதா இல்லையா என்பது தான் மீதிக் கதை….

பாரதி, அவந்திகா, ஷ்ரேயா மூவரும் யார்..??அந்த அதிகாரிக்கும், சுமந்திற்க்கும் என்ன தொடர்ப்பு, சுமந்த் எவ்வாறு ஷ்ரேயாவையும், அவள் குடும்பத்தினரையும் சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறான் என்பதில் இருக்கிறது கதையின் ஸ்வாரஸ்யம்

எந்த இடத்திலும் சிறு தொய்வின்றி நகற்கிறது கதைஆண் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், இந்த சமூகப் பார்வையில் அதை சுலபமாக கடந்து விடுகிறான். ஆனால்  பாதிப்பு என்னவோ அந்த ஆணின் குடும்பத்திற்க்கும் அவன் மனைவிக்கும் தான் என்பதை சுமதியின் வாயிலாக அறியலாம்..

தனி மனித ஒழுக்கத்தின் தரம் தாழ்ந்ததற்க்கு இன்றைய திரைத்துறையும் காரணமென்பதை ஆழமாக பதிவிட்டிருக்கிறார்.. வாழ்க்கை எப்போது எவ்வாறு வேண்டுமானலும் மாறும் , பாதை மாறும் போது அதை எதிர் கொள்ள கற்ற கல்வியை விட மிகச் சிறந்த துணை வேறு எதுவும் இல்லை .. தவறு செய்தவர்கள், தண்டனை பெற்றே ஆகவெண்டும் என்பதை  தன் அறிவால் ஷ்ரேயா நிடத்திக் காட்டுகிறாள்..

ஹீரோ சுமந்த்எப்பொழுதும் போல உங்கள் அன்பான எனர்ஜடிக் ஹீரோ.. என்ன தான் தவறான வழியில் தந்தை அரசியலில் சம்பாதித்த பணத்தை மூலதனமாக கொண்டு தன் லட்சிய கனவான ஊடகத்துறையில் கால் பதித்தாலும் , நான் மக்களுக்கு நன்மையைத் தான் செய்கிறேன் என்று கூறும் யதார்த்த மனப்பான்மை கொண்டவன்.. ஷ்ரேயாவின் அன்புக் காதலன்… “காதலித்துப் பார்……..” என்று கண்ணியமாய் காதல் புரிபவன்….         நியாயவாதி( ஆளை கடத்தியும்  நிரூபிப்பான்).. நேர்மையான விவேக்கின் அபிமானி. மொத்ததில் எனக்கு பிடிச்ச ஹீரோங்க..

ஹீரொயின் ஷ்ரேயா.. அழகான அன்பான அறிவான (கல்யாண மாலை விளம்பரம் மாதிரி இருக்கோ !!) ஹீரொயின்.. தம்பியை தடம் மாராமல் வழிநடத்தும் ஆசான். அன்னையை கொடும் துயரில் இருந்து மீட்டெத்துதவள்.. சமூக நல கொள்கைகள் கொண்டவள். தன் உறவே தவறு செய்தாலும் தண்டனை பெற்றுத் தரும் நேர்மையானவள்..  சுமந்தின் மனம் கவர்ந்தவள்.

மற்றொரு மனம் நிறைந்த நாவல்.  மொத்ததில் FEEL GOOD..

With luv,
Keerthi.

No comments:

Post a Comment