Thursday, August 3, 2017

தோழி எழுத்தாளர் கோகிலா அவர்களின் அழகிய கருத்தாக்கம்

ஹாய் ஷாஹி,

வழக்கம் போல் 'வாவ்' தான் கதை. உங்க முதல் கதையிலேயே செமயா இம்ப்ரஸ் ஆகியிருக்கேன். அதைவிட ஐந்து மடங்கு இம்ப்ரஸ் ஆனேன்னு சொல்லலாம் உங்க ஐந்தாவது படைப்பில். Awesome shahi.

வெற்றி, பிரமோத் அறிமுகப் படலத்தில் இருவரும் வேலையில்லா பட்டதாரி தனுஷ், அமிதேஷா என் மைன்ட்ல வந்து.. போகப் போக(3, 4 எபியிலேயே) மைன்ட்டை நல்லா சர்ஃப் போட்டு வாஷ் பண்ணி ஹமீதாவிற்கே உரிய தனித்துவமான கேரக்டர்களான வந்துட்டாங்க... வெற்றி-ப்ரமோத் நட்பு, வெற்றி-நயனி காதல் இது இரண்டிலுமே எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நினைத்து அடுத்து என்ன? அடுத்து என்ன? எதிர்பார்ப்போட ஒவ்வொரு பக்கங்களா திருப்ப வைத்து.. ரொம்பவே விறுவிறுப்பா கதை நகர்ந்தது.

இரண்டு ஹீரோ இருக்கும் போது யாரவது ஒருவருடைய கேரக்டர் தான் நம்மளை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணும். பட் இதில் இரண்டு பேருமே நம்ம மனதுக்கு மிக பிடித்தமான கேரக்டர்களாக வந்தது ஹமீதாவின் எழுத்து திறமைன்னு தான் சொல்வேன். மனதை வருடும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கதை சொல்லியதும் செம செம செம சூப்பர்.

அடுத்து நம் அரசால் நாம் சந்தித்த பிரச்சனைகளை ரொம்பவே எதார்த்தமா கதைக்குள் கொண்டு வந்துட்டீங்க. எந்த பிரச்சனைகளையும் விட்டு வைக்கல.. ஹாஸ்பிட்டல் பில், மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டு பணமில்லாமல் கஷ்டப்பட்டவர்கள், கருப்பு பணத்தை மாற்ற நினைத்தவர்கள் இப்படி ஒரு விஷயத்தை விடாமல்.. நவம்பர் 8 ல இருந்து ஜனவரி என்ட் வரை தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் கதைக்குள் கொண்டு வந்தது.. ப்ரில்லியண்ட் ப்ரசன்டேஷன். சில பேச்சிலர்ஸால் வரும் பிரச்சனைகள்.. பீக் அவர்ஸ் லிஃப்ட் பிரச்சனை எல்லாம் யதார்த்த உலகத்தை ஸ்டாராங்கா எங்களுக்கு காட்டியது. ப்ரமோத் & வெற்றி, நயனி, லிஃப்ட் இப்படி ஆர்டர்லதான் 'பேசும் மொழியெல்லாம்' என் மனதில் பதிந்தது.

ஒவ்வொரு கதையிலும் உங்களை பாராட்டி பாராட்டி புதுசா என்ன பாராட்டுறது வார்த்தைகள் கிடைக்கல போங்க.. நான் படித்ததிலேயே உங்கள் எழுத்து ஓரிடத்தில் நிற்காமல் கதைக்கு கதை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படியே நாளுக்கு நாள் வளர்ந்து இன்னும் ரீச் ஆகாத ஒரு சில வாசகர்களையும் சென்றடைந்து, எப்பொழுதும் இந்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

1 comment:

  1. இளைய தலைமுறை எழுத்தாளர்களில் என் மனம் கவர்ந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள்... உங்களிடமிருந்து இத்தகைய பாராட்டும் கருத்தாக்கமும் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது கோகிலா. அழகிய கருத்துகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் பல...

    ReplyDelete