Monday, August 28, 2017

பேசும் மொழியிலெல்லாம் - தோழி ஜென்சி ஜோஸ் மைக்கேல் அவர்களின் கருத்தாக்கம்

பேசும் மொழியிலெல்லாம்

முன்பாதி ஆன்லைனில் படித்தபோதே கவர்ந்த வித்தியாசமான கதா நாயகன் , கதா நாயகி....இன்று மீதியும் வாசித்து முடிக்க என்னில் கலவையான உணர்வலைகளை எழுப்பியது....அந்த உணர்வலைகளிலிருந்து மீளும் முன்பாக கருத்தை பதிவிடவும் தூண்டியது....

குறிப்பிட்ட காலச் சூழலை துளியளவும் பொய்மை கலக்காமல் கதையோட்டத்தோடு கொண்டுச் சென்றிருப்பது மறுபடி அவற்றை நினைவுக் கூறச் செய்து ஏற்படுத்தும் அதிர்வு உணர்வலைகள் ஒரு புறம்.

கார்த்திகாவெனும் எதிர்மறை உணர்வலைகள் ஒரு புறம்,

சூழ்னிலை கைதியான நயனி, கூடவே துன்புறும் அவள் பெற்றோர் , தம்பி இவர்களின் துயர உணர்வலைகள் ஒரு புறம்,

பெண் குழந்தை ஒன்று சிதிலமாக்கப்பட்டு விடுமோவென பயந்து அவ்வாறு நிகழாமலிருந்தமைக்கு கதாசிரியருக்கு நன்றிச் சொல்லத் தூண்டும் உணர்வுகள் ஒரு புறம்,

ப்ரமோதின் அதீத தன்னம்பிக்கை மற்றும் அவனது தந்தையின் அதீத புத்திசாலித்தனம் கொணர்ந்த எரிச்சல் உணர்வு ஒரு புறம்

நயனியின் கையறு நிலையை கண்டுக் கொள்ளாமல் அவளை பலியாக்க துணிந்த குடும்பத்தினர் மீதெழுந்த கோப உணர்வுகள் ஒரு புறம்

தன்னுடைய காதலை அடைய போராடுகின்றவனின் திட்டங்களை திகில் பரவ பார்த்திருந்தது ஒரு புறம்

அவர்கள் காதல் மழையில் நனைந்திருந்த நினைவுகள் ஒரு புறம்...

சிற்சில எதிர்பாரா துன்பங்கள் இக்கட்டுக்கள் தாண்டி சுபமாக கதை நிறைவுற்ற போதோ தித்திப்பான உணர்வலை பரவியது மனமெங்கிலும்...

மிக அருமையான கதை ஹமீதா சிஸ்...

பிரமோத் கணிக்கப்பட இயலாதவன்....அவன் அழும் போது கஷ்டமாக இருந்தது...

அவனுக்காக நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே எனும் ஆதங்கம் தோன்றியது உண்மை.

சில இடங்களை quote செய்ய நினைத்தேன்...இப்போது மொத்த கதையுமே மனதிற்குள் வலம் வருவதால் நியாபகம் வரவில்லை... மறுபடி வாசித்து பின்னர் அவற்றை குறிப்பிடுவேன்... (y)

இன்று உங்கள் கதையை வாசித்ததில் பெரியதொரு விருந்து சாப்பிட்ட களிப்பை உணர்கின்றேன்....

மென்மேலும் பற்பல அழகான படைப்புக்கள் அளிக்க வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment