Friday, August 31, 2018

வாசகி அமிர்தா சேஷாத்ரி அவர்களின் விமர்சனம்

உந்தன் அலாதி அன்பினில் - ஹமிதா

இந்நாவலில் சரக்கு கப்பலில் வேலை செய்யும் ஆட்களையும், அவர்களின் வேலை, சந்திக்கும் இன்னல்கள், அதனால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ஆங்கில நாவலாசிரியர் ஆர்தர் ஹெய்லின் ஏர்போர்ட், ஹோட்டேல் போன்றவற்றை படித்தால் கிட்டத்தட்ட அத்துறை பற்றிய விஷயங்களை 80% தெரிந்து கொள்ளலாம். இதில் சரக்கு கப்பலின் செயல்பாடுகள்.

ஒரு சில ஆங்கில நாவலாசிரியர்கள் கடந்த காலம், நிகழ் காலம் என மாறி மாறி பயணித்து ஒரு இடத்தில் கதை நேர் கோர்வையாக வரும். அதே பாணி இங்கும்.

நாயகன் தமிழ் கோமாவில் இருக்கும்போது அவனின் ஆழ்மன எண்ணங்களையும், நடப்பு கதையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கலந்து வருகிறது.

ஆனால் இதில் அசோக்கின் மன அழுத்தம், அவனின் முடிவு பற்றி முதலில் வருகிறது. பின்னர் ஆயில் நிரப்பும் இடத்தில் அவரின் பணிகள் பற்றி வரும். அதே போல் தான் யுஜின் பற்றியும். ஒரு வேளை ஆழ்மனத்தின் நினவுகள் என்பதால் முன்னுக்கு பின் முரணாக வருகிறதோ? மற்றபடி இரண்டு நிலைகளும் அழகாக வந்து ஒரு மையத்தில் இணைகிறது

ஐஸ்வர்யா, கீர்த்தி, மதுரா இவர்களின் நட்பில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டு கொடுக்கும் மனப்பாங்கு.

ஐஸ்வரியா- கொஞ்சம் சுயநலம் இருந்தாலும், பொறாமை குணம் சிறிதும் இல்லாத பெண். தமிழை மதுராவிற்கு விட்டு கொடுக்கும் இடம், தமிழ் கோமாவில் இருக்கும்போது மதுராவை அவள் செலவில் அவனை பார்க்க அழைத்து செல்லும் இடம் , டமில் 😀😀😀 அனைத்தும் அருமை
கீர்த்தி- ஐஸ், மது. இருவரையும் புரிந்து அந்த நட்பை பாலன்ஸ் செய்யும் அழகு

ஷோபா- தமிழின் தங்கை. அந்த பருவத்திற்கே வரும் ஈர்ப்பையும் ,தடுமாற்றங்களை மதுராவின் வழிகாட்டுதலில் அவற்றை கடந்து வருவது.
தமிழ்/டமிழ்-- பார்த்தவுடன் ஐஸ்வர்யா விடம் கவிழ்ந்தாலும், பழகியபின் மதுராவின் குணத்தால், பேச்சாலும் ஈர்க்கப்படுகிறான். அதே சமயம் ஐஸ்வர்யா வின் மனம் புண்படாமல் தான் வேறு பெண்ணை (மது) காதலிப்பதையும். திருமணத்தை தவிர்ப்பதும், அப்பா,அம்மா கவனிக்க தவறியதை ஒரு அண்ணனாக ஷோபாவை தன் அன்பாலும், கண்டிப்பாலும், மது,கீர்த்தி இவர்களின் உதவியால் அவளை நல்வழிப்படுத்துவதும் என எல்லாமே அழகுதான்

மதுரா- தமிழின் பால் ஈர்க்கப்பட்டாலும், ஐஸ்வர்யாவிற்கு பேசி முடித்து இருப்பதால், தன் மனதை மறைத்து அவளை பற்றி நல்லவைகள மட்டுமே தமிழிடம் பேசும் பெண். பின் தமிழின் மனம் அறிந்த பின் அவனின் துறையை நன்கு புரிந்து அவனுக்கு துணை நிற்பதும்,

இக்கட்டான தருணத்தில் தமிழ் சொன்னதை 'A Queen should always hold her head high, and a sailor wife is called Queen'  என்பதை நினைவில் அடுத்து நடக்க இருப்பதை எதிர்கொள்ளும் பாங்கு.

மொத்தத்தில் நல்ல கதை.

வாழ்த்துகள் ஷாஹி.

No comments:

Post a Comment