Wednesday, September 6, 2017

பேசும் மொழியிலெல்லாம் - செல்வராணி ஜெகவீரபாண்டியன் அவர்களின் விமர்சனம்



பேசும் மொழியில் எல்லாம் ....

இந்த புத்தகம் கைக்கு வருவதட்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது! லைப்ரரியில் முன்னாடியே புக் பண்ணி வைத்து வாங்கினேன்!!

ஹமீதா இந்த கதையை ஆரம்பிக்கும்போதே எனக்கு இந்த கதையில் அவர்கள் சமீப கால நிகழ்வுகளை கோர்த்து எழுதுகிறார்கள் என்று பெரிய ஒரு ஆர்வம் இருந்தது.நாம் அனைவருமே அனுபவித்த பிரச்சினைகளை அவர்கள் தொடும்போதே நாம் கதைக்கு நெருக்கமாகி விட்டோம்!ரூபாய் நோட்டு செல்லாததில் தொடங்கி,முதல்வர் மரணம், சென்னையில் வந்த வெள்ளம் ,ஒரு புறம் மக்கள் பணம் எடுக்க வரிசையில் நிட்பது, அதே நேரம் சிலர் வேகம் வேகமாக நகைகளும் பொருட்களும் வாங்கி குவிப்பது , சாதாரண மக்கள் வீட்டில் சேமித்து வைத்து இருந்த சேமிப்புகள் எல்லாம் வெளியே எடுத்து கரைத்தது என்று
நம் மனதில் தோன்றிய அணைத்து விஷயங்களையும் அருமையாக கதையின் ஓட்டத்திலேயே உறுத்தாத வண்ணம் எழுதியதட்கே ஒரு பெரிய சபாஷ்!!!

கதை பற்றி .....நடுத்தர வர்க்கத்துக்கே உரிய கஷ்டங்கள் நிறைந்த குடும்பம்,சுயநலம் மிக்க கார்த்திகா ஒரு புறம் ,பெற்றவர்களின் நிலை அறிந்து தன தலை மேல் பாரம் சுமக்கும் நயனி,.படிக்கும்தம்பி, பரிதாப அப்பா பாவப்பட்ட அம்மா...இவர்களுடன் நம் நாயகன் வெற்றி!!எப்படிப்பட்ட ஒரு அருமையான கதா பாத்திரம்!! சொந்த முயட்சியில் ஒரு தொழில் ஆரம்பிச்சு அது சரியா போகாத விரக்தியில் இருக்கும்போது அப்பாவின் ஏச்சுக்களும் பேச்சுக்களும் அவனை சென்னை நோக்கி இழுத்து வருகிறது.அங்கு அவன் இறங்கும்போதே பணம் செல்லாத செய்தியுடன் தான் இறங்குகிறான்!!நயனுக்கு போன் செய்ய வேண்டிய சூழ்நிலை,நிட்பதுவே நடப்பதுவே பாடல் ரிங் டோன்லயே அவன் பிளாட்!!!அன்றைய இரவில் அவளின் குடும்பம் செய்யும் உதவிகளை வேறு வழியின்றி அவன் ஏற்று கொள்கிறான்!!அவளின் தலையசைப்பில் விழுபவன்தான்!!! பின் எழவே இல்லை!!!

நயனியும் அவனின் ரிங் டோனில் ...காக்கை சிறகினிலே நந்தலாலா...கவரப்படுகிறாள்..அனால் ஹமீதா அதை எழுதல!!நானே அப்படி நினைச்சுக்கிறேன்!!இருவரும் சேர்ந்து வேலை பார்க்க நேரிடுகிறது..ப்ரமோதின் வருகை, அவன் ஒரு ஸ்பாயில்ட் சைல்டு ஆகத்தான் என் கண்ணுக்கு தெரிகிறான்!!தன மீது உள்ள ஒரு கர்வம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்...நயனின் மீது ஆசைப்படுவதும் அது நடக்கவில்லை என்று அறிந்ததும் வெளியே இயல்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளே உடைந்து அழுவது...அசத்தலான கதாபாத்திரம்!!

அந்த லிஃப்ட் !! நான் கூட அதை ஒரு பொருட்டா நினைக்கவே இல்ல!!
அதில் இப்படி ஒரு காதல் பயணத்தை எதிர் பார்க்கல!! வாவ் ஹமீதா!!!கதையின் ஒரு பாத்திரமாகவே மாறி விட்டது!!என்ன ஒரு அழகான காதல் சிருங்காரங்கள்!! வெற்றியின் மைண்ட் வாய்ஸ் ...சான்ஸே இல்ல!! எனக்கு ரொம்ப பிடிச்சது...மாம்பழம் பார்த்திருக்கேன்,நல்ல அல்போன்சா மாம்பழத்தை ப்ரூட் கார்விங்க்ல ரோஜா பூவா செஞ்சு அதுக்கு கொஞ்சம் மல்லைகை பூவை வெச்சு விட்டா எப்படி இருக்கும்ன்னு இப்போதான் பார்க்கிறேன்!!!....சூப்பர் ஹமீதா...

கார்த்திகா மாதிரி பெண்களை என்ன சொல்றது??இன்னும் அவளுக்கு இவர்களின் காதல் புரியவே போவதில்லை..தான் தன சுய நலம் என்று இருக்கும் பெண்களையும் நாம் பார்க்கிறோமே!!யாருக்கும் தெரியாமல் அவர்களின் திருமணம் நடக்கும் வரை நம்மை ஒரு திகிலுடன் படிக்க வைக்கிறது கதை...பாவம் பிரமோத், காதல் சொல்ல நினைக்கும் போதே அவள் கர்ப்பம் பற்றி அறிய நேர்கிறது..அவன் அந்த சூழ்நிலையை கையாளும் விதம் அட சொல்ல வைக்கிறது!!வில்லன் என்று நாம் நினைத்த நேரத்தில் அவன் ஒரு அழகான மனிதனாக நம் கண்ணுக்கு தெரிகிறான்!!

ஆனாலும் அந்த கிட்சன் சீன இல்லேன்னா நாங்க உங்களை கும்மிதான் எடுத்துருப்போம்!!அதுக்கே உங்களுக்கு என் பாராட்டுக்கள் ..வாழ்த்துக்கள் ஹமீதா ...அடுத்த கதையுடன் வாங்க...நானும் இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டேன் என்பதை பெருமையாக கருதுகிறேன்!!

Monday, August 28, 2017

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் அபிபாலா அவர்களின் அழகிய கருத்தாக்கம்


ஹாய் ஹமிதா மேடம் .

நீங்கள் 'பேசும் மொழியிலெல்லாம்' மில் பாரதியை.. நேசத்தை...காதலை.. நட்பை..குறையாமல் அள்ளி..அள்ளி..கொடுத்திருக்கிறீர்கள் ...

வெற்றி மாறன்...பாரதியின் வரிகளில் மெய்யுருகிப் போகும் மிஸ்டர். ரைட். இன்டீரியர் டிசைன் மேல் ஈடுபாடு கொண்டு வாழ்வில் அதற்கான மிகச்சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் துடிப்பான ரோஷக்கார இளைஞன்..
தந்தையின் சுடுசொற்களால் காயப்பட்டு...தன் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு.. தந்தையின் நண்பரின் பர்னிச்சர் ஷோரூமில் வேலைக்கு சேர அவன் எடுக்கும் முடிவே அவன் வாழ்க்கையை புரட்டி போடுகிறது..
தன் சீனியர் ஸ்டாஃபாக அறிமுகமாகும் நயனிகாவிடம் மனதை பறி கொடுக்கிறான்.. அவளைத் தன்னோடு இணைத்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றானா... என்பதுதான் ஹமிதா மேடமின் விரல்களின் வழியே இன்று நம் கைகளில் தவழும்...'பேசும் மொழியிலெல்லாம்'..😊😊
 

demonetisation என்ற சூறாவளி நம்மைப் போன்ற சாதாரண மக்களின் இயல்பான வாழ்க்கையை எவ்வாறு புரட்டிப் போட்டது..என்பதை இதைவிட யதார்த்தமான யாரும் சொல்ல முடியாது... கூடவே புயல்.. மழையின் பாதிப்புகளும் நம் கண் முன்னே பயம் காட்டுகிறது..
 

நயனிகாவின் ஹீரோ வெற்றிதான் என்றாலும்... பிக் பாஸாக.. வெளிநாட்டிலிருந்து அதிரடிப்புயலாக நுழைந்து... வெற்றி யிடம் நட்பையும்.. நயனிகாவிடம் காதலையும் ... பெற்றோரிடம் அன்பையும் வேண்டி நிற்கும் .. பிரமோத் தான் டைட்டில் வின்னர் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது..!!😉😉
 

சுயநலத்தின் மொத்த உருவமாக கார்த்திகா.. அப்பட்டமான மிடில் கிளாஸ் ஃபேமலி பெற்றோராக மோகன்ராம்..விஜயா..
 

கண்டிப்பும் சிடுசிடுப்புமாக வீரராகவன்.. சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு கயவர்களால் ஏற்படும் ஆபத்து.. என்று சுவாரஸ்யங்களுக்கு குறைவே இல்லை.. கதைக்கு சுவை கூட்ட ரொமான்ஸை மடியில் கட்டிக் கொண்டு லிஃப்டும் கூடவே பயணிப்பது ரசனை..
 

ஆனா இரண்டு சீன்ல வர்ற தியாகுவுக்கு கூட கலைச்செல்வியை ஜோடி சேர்த்து வச்சிருக்கீங்க.. !! பிரமோத்தை மட்டும் புலம்ப வெச்சு ஏமாற்றத்தை கொடுத்துட்டீங்களே.. இதெல்லாம் செல்லாது.. செல்லாது..!! அதனால இதோட செகண்ட் பார்ட் எழுதறீங்க.. !! சரியா.. இது எங்க ரிக்வெஸ்ட்.. அதுவும் சில பல ரொமான்ஸுடன் ஒரு சூப்பர் டூப்பர் பெண்ணை ஜோடியாக போடறீங்க..!!😁😁 சரி தானே ஃப்ரண்ட்ஸ்.. உங்க கிட்டயிருந்து விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..
 

இந்தக் கதை நம் உள்ளத்தோடு ஒன்றி... உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து எங்கள் அனைவரின் இதயத்தையும் குளிர்விப்பது நிஜம்.. இதன் பிரமாண்ட வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷாஹி... 💖💖

பேசும் மொழியிலெல்லாம் - தோழி ஜென்சி ஜோஸ் மைக்கேல் அவர்களின் கருத்தாக்கம்

பேசும் மொழியிலெல்லாம்

முன்பாதி ஆன்லைனில் படித்தபோதே கவர்ந்த வித்தியாசமான கதா நாயகன் , கதா நாயகி....இன்று மீதியும் வாசித்து முடிக்க என்னில் கலவையான உணர்வலைகளை எழுப்பியது....அந்த உணர்வலைகளிலிருந்து மீளும் முன்பாக கருத்தை பதிவிடவும் தூண்டியது....

குறிப்பிட்ட காலச் சூழலை துளியளவும் பொய்மை கலக்காமல் கதையோட்டத்தோடு கொண்டுச் சென்றிருப்பது மறுபடி அவற்றை நினைவுக் கூறச் செய்து ஏற்படுத்தும் அதிர்வு உணர்வலைகள் ஒரு புறம்.

கார்த்திகாவெனும் எதிர்மறை உணர்வலைகள் ஒரு புறம்,

சூழ்னிலை கைதியான நயனி, கூடவே துன்புறும் அவள் பெற்றோர் , தம்பி இவர்களின் துயர உணர்வலைகள் ஒரு புறம்,

பெண் குழந்தை ஒன்று சிதிலமாக்கப்பட்டு விடுமோவென பயந்து அவ்வாறு நிகழாமலிருந்தமைக்கு கதாசிரியருக்கு நன்றிச் சொல்லத் தூண்டும் உணர்வுகள் ஒரு புறம்,

ப்ரமோதின் அதீத தன்னம்பிக்கை மற்றும் அவனது தந்தையின் அதீத புத்திசாலித்தனம் கொணர்ந்த எரிச்சல் உணர்வு ஒரு புறம்

நயனியின் கையறு நிலையை கண்டுக் கொள்ளாமல் அவளை பலியாக்க துணிந்த குடும்பத்தினர் மீதெழுந்த கோப உணர்வுகள் ஒரு புறம்

தன்னுடைய காதலை அடைய போராடுகின்றவனின் திட்டங்களை திகில் பரவ பார்த்திருந்தது ஒரு புறம்

அவர்கள் காதல் மழையில் நனைந்திருந்த நினைவுகள் ஒரு புறம்...

சிற்சில எதிர்பாரா துன்பங்கள் இக்கட்டுக்கள் தாண்டி சுபமாக கதை நிறைவுற்ற போதோ தித்திப்பான உணர்வலை பரவியது மனமெங்கிலும்...

மிக அருமையான கதை ஹமீதா சிஸ்...

பிரமோத் கணிக்கப்பட இயலாதவன்....அவன் அழும் போது கஷ்டமாக இருந்தது...

அவனுக்காக நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே எனும் ஆதங்கம் தோன்றியது உண்மை.

சில இடங்களை quote செய்ய நினைத்தேன்...இப்போது மொத்த கதையுமே மனதிற்குள் வலம் வருவதால் நியாபகம் வரவில்லை... மறுபடி வாசித்து பின்னர் அவற்றை குறிப்பிடுவேன்... (y)

இன்று உங்கள் கதையை வாசித்ததில் பெரியதொரு விருந்து சாப்பிட்ட களிப்பை உணர்கின்றேன்....

மென்மேலும் பற்பல அழகான படைப்புக்கள் அளிக்க வாழ்த்துக்கள்