Monday, July 31, 2017

தோழி ஸ்ரீமதி கோபாலன் அவர்களின் விமர்சனம்



பேசும் மொழியெல்லாம்

ஹமீதா அவர்களின் நாவல் வரிசையில் ஐந்தாவது நாவல்....எப்பொழுதும் போல் அருமையான காட்சிகள் , அழகான வார்த்தைப் பிரயோகங்களால் படிப்பவர்களை கட்டிப் போடுகிறார் .

வெற்றிமாறன் - நயனிகா

கதையின் நாயகன் , நாயகி ...இவர்கள் வரும் காட்சிகள் அனைத்திலும் ஹமீதாவின் தனி முத்திரை ....

பிரமோத்

வெற்றி கதையின் நாயகன் என்றாலும் ....என்னைப் பொறுத்தவரை கதாநாயகனாக என் மனதில் உயர்ந்து நிற்பது இவன்தான்...
மற்றபடி சாதாரண குடும்பம்...அவர்களின் அன்றாட பிரச்சனைகள் .....அவர்களின் தினப்படி போராட்டங்கள்.....

கூடவே கதையோடு ஒட்டி வரும் இன்றைய சமூகப் பிரச்சனைகள் பண மதிப்பிழப்பால் .....மக்கள் சந்தித்த பிரச்சனைகள்.....இயற்கை சீற்றத்தால் மற்றும் பல நிகழ்வுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் .... கூடவே இன்று தினமும் கேள்விப்படும் சிறுவர்களின் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமை .... அதனால் பாதிக்கப் படுபவர்களின் உணர்வுகளை கதை ஒட்டதோடு பொருத்தி கொண்டு சென்றிப்பது அழகு .

கதையில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் உண்டு ....மொத்தத்தில்
ஹமீதாவின் மற்றொரு அழகான நாவல் பேசும் மொழியெல்லாம் .....நன்றி ஷாஹி உங்களுக்கு ...

Wednesday, July 26, 2017

பேசும் மொழியிலெல்லாம் - புத்தகம் கிடைக்கும் இடங்கள்


பேசும் மொழியிலெல்லாம்
ஆசிரியர் : ஹமீதா
விலை : ரூ.225

கோவை வாசகிகளுக்கு ஒரு நற்செய்தி:
கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் எமது பதிப்பக புத்தகங்கள் அனைத்தும் Sapna books ஸ்டால் நம்பர். 80 ல் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புத்தகங்கள் வாங்க :

SS பப்ளிகேஷன்ஸ்
No. 21, Thirumalaiyappan St,
Flat no. 4, Ruby Palace,
Purasawalkam,
Chennai – 600 007
Ph: 044 26480200
Whats App : 91 8072318750

ஆன்லைனில்:

உடுமலை.காம் udumalai.com
https://www.udumalai.com/search.php?q=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

மெரீனாபுக்ஸ் MarinaBooks.com
http://www.marinabooks.com/detailed?id=5%207296&name=%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%20%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d...


வீகேன் புக்ஸ் Wecanshopping.com - தமிழ் இணைய புத்தக அங்காடி
http://www.wecanshopping.com/products/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D....html



Murugan book stores, Canada

Poobalasingam Book Depot, Colombo

Karthik book stall, Mylapore

New book lands (Narmada pathipagam)

Vijaya Pathippagam, Coimbatore

Vijaya Pathippagam, Tirupur

Vijaya Pathipagam, Karur

Vijaya Pathippagam, Pollachi

Indhu Book house, Erode

Devathi Book Stall, Trichy

Malligai Book Centre, Madurai

Adityan Book shop, T. Nagar

Ravi Book shop, T. Nagar

Moon Book shop, Pondy Bazaar

Merlin Publication, T. Nagar

Om Muruga Book shop, Salem

Chitra devi college Book shop, Thirunelveli

AVS Book shop, Nagercoil

Eagle Book shop, Tuticorin

Maya Books, Theni

Sri Markandeya Book Gallery, Kumbakonam

Sapna Books, Coimbatore

Books & Books, Pollachi

Book Park, Karur

Bharathy Books, Pondicherry



Tuesday, July 25, 2017

தோழி மாதினி அவர்களின் அழகிய கருத்துகள்

கதை வாசித்தவுடன் தனது மனதில் உணர்ந்ததை உணர்ந்தவாறே பகிர்ந்து கொண்ட தோழி மாதினியின் பதிவு... மிக்க நன்றி மாதினி!

========================================================================
உங்கள் நாவலை படித்து நான் மெய்மறந்திட்டேன் பரவச நிலை தான் .... அருமையா எழுதியிருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு மா! நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை அவங்க அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி தெளிவா சொல்லிருக்கீங்க, ஆறு மாதத்திற்கு முன்னால் நாம்ப என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தோமோ அதை உங்கள் எழுத்துக்களில் படிக்கும் போது, எப்படிடா இவ்வளவு பெரிய மலையை கடந்து வந்தோம்னு ஆச்சரியமா இருக்கு! வெற்றியும் நயனியும் செம ஜோடி மா! அவன் நண்பன் தியாகு சொன்னமாதிரி வெற்றிக்காக செய்யபட்டவளோ நயனி..... வெற்றியின் குறும்பு பேச்சு அவன் அடிக்கிற லூட்டி எதையும் மறக்க முடியல.

 அவங்க திருமணம் நடக்குமோ நடக்காதோனு சஸ்பென்ஸா இருந்துச்சி மா... வெற்றி காதலை சொல்ற விதம் சூப்பர் மா "இமையும் இமையும் சேர்ந்திருப்பது போல்" நீங்க எழுதிய வரி அட்டகாசம் வார்த்தையில் வர்ண ஜாலங்கள் செய்திருக்கீங்க ஹமிதா! இப்படி நிறைய வரிகளை நான் புத்தகத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அனுபவித்து படித்தேன் மா...... அதுவும் லிப்ட் சீனை மறக்கவே முடியாதுமா செம! தற்சமயம் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளையும் நீங்க விட்டு வைக்கலமா.... 

 எனக்கு முக்கோண காதல் கதைகளை படிப்பதில் பிடித்தம் கிடையாது பா அதில் யாராவது ஒருத்தருக்கு மனக் கஷ்டம் ஏற்படும் அதை என்னால் தாங்க முடியாது..... ஆரம்பத்தில் பிரோமத்தை நான் வில்லனாகவே நினைச்சிட்டேன் அதனால் தான் அவன் மேல் எந்த வருத்தமும் இல்லாமல் இருந்திச்சு ஆனால் போக போக அவனோட நல்ல மனசுக்கு நயனி கிடைக்கலியேனு ரொம்ப வருத்தமாகிடுச்சு. அவனுக்கென்று ஒரு ஜோடியை அமைச்சிருக்கலாம். இவங்க திருமணத்தை வெற்றியோட அப்பா ரொம்ப எதிர்ப்பார்னு பார்த்தால் மகனை திட்டிட்டு மருமகளை சப்போர்ட் செய்றார்.  நெஞ்சில் தாங்கும் கணவன்,தலையில் வைத்து கூத்தாடும் புகுந்த வீட்டு சொந்தங்கள் கிடைக்க தான் நயனிக்கு பிறந்த வீட்டில் அவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டதா..... 

மொத்தத்தில் "பேசும் மொழியிலெல்லாம்" என் மனதில். என்றும் நீங்கா அன்பு மொழியானது.

வாழ்த்துக்கள் ஹமிதா அருமையான நாவலை கொடுத்ததற்க்கு!
=========================================================================