Monday, August 28, 2017

பேசும் மொழியிலெல்லாம் - தோழி ஜென்சி ஜோஸ் மைக்கேல் அவர்களின் கருத்தாக்கம்

பேசும் மொழியிலெல்லாம்

முன்பாதி ஆன்லைனில் படித்தபோதே கவர்ந்த வித்தியாசமான கதா நாயகன் , கதா நாயகி....இன்று மீதியும் வாசித்து முடிக்க என்னில் கலவையான உணர்வலைகளை எழுப்பியது....அந்த உணர்வலைகளிலிருந்து மீளும் முன்பாக கருத்தை பதிவிடவும் தூண்டியது....

குறிப்பிட்ட காலச் சூழலை துளியளவும் பொய்மை கலக்காமல் கதையோட்டத்தோடு கொண்டுச் சென்றிருப்பது மறுபடி அவற்றை நினைவுக் கூறச் செய்து ஏற்படுத்தும் அதிர்வு உணர்வலைகள் ஒரு புறம்.

கார்த்திகாவெனும் எதிர்மறை உணர்வலைகள் ஒரு புறம்,

சூழ்னிலை கைதியான நயனி, கூடவே துன்புறும் அவள் பெற்றோர் , தம்பி இவர்களின் துயர உணர்வலைகள் ஒரு புறம்,

பெண் குழந்தை ஒன்று சிதிலமாக்கப்பட்டு விடுமோவென பயந்து அவ்வாறு நிகழாமலிருந்தமைக்கு கதாசிரியருக்கு நன்றிச் சொல்லத் தூண்டும் உணர்வுகள் ஒரு புறம்,

ப்ரமோதின் அதீத தன்னம்பிக்கை மற்றும் அவனது தந்தையின் அதீத புத்திசாலித்தனம் கொணர்ந்த எரிச்சல் உணர்வு ஒரு புறம்

நயனியின் கையறு நிலையை கண்டுக் கொள்ளாமல் அவளை பலியாக்க துணிந்த குடும்பத்தினர் மீதெழுந்த கோப உணர்வுகள் ஒரு புறம்

தன்னுடைய காதலை அடைய போராடுகின்றவனின் திட்டங்களை திகில் பரவ பார்த்திருந்தது ஒரு புறம்

அவர்கள் காதல் மழையில் நனைந்திருந்த நினைவுகள் ஒரு புறம்...

சிற்சில எதிர்பாரா துன்பங்கள் இக்கட்டுக்கள் தாண்டி சுபமாக கதை நிறைவுற்ற போதோ தித்திப்பான உணர்வலை பரவியது மனமெங்கிலும்...

மிக அருமையான கதை ஹமீதா சிஸ்...

பிரமோத் கணிக்கப்பட இயலாதவன்....அவன் அழும் போது கஷ்டமாக இருந்தது...

அவனுக்காக நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே எனும் ஆதங்கம் தோன்றியது உண்மை.

சில இடங்களை quote செய்ய நினைத்தேன்...இப்போது மொத்த கதையுமே மனதிற்குள் வலம் வருவதால் நியாபகம் வரவில்லை... மறுபடி வாசித்து பின்னர் அவற்றை குறிப்பிடுவேன்... (y)

இன்று உங்கள் கதையை வாசித்ததில் பெரியதொரு விருந்து சாப்பிட்ட களிப்பை உணர்கின்றேன்....

மென்மேலும் பற்பல அழகான படைப்புக்கள் அளிக்க வாழ்த்துக்கள்

யாரைக்கேட்டது இதயம் - எழுத்தாளர் பவித்ரா நாராயணன் அவர்களின் கல கல பதிவு



யாரைக்கேட்டது இதயம் – ஹமிதா aunty

ஒரு Stylish ஆன கதை…இதுவரை இவ்வளவு stylish ஆன கதை யாரும் எழுதல..அப்படியே எழுதியிருந்தாலும் நான் படிக்கல…..சுமந்த் – மை டியர் சுமன்….விக்ரம் கு ஈகுவளா எனக்குப் பிடிச்ச ஹீரோ.ஒன் ஐ சுமன் ஒன் ஐ விக்ரம்…சுமந்த் பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே போகலாம்….ஹேண்ட்சம் stylish…..அண்ட் சோ ஆன்.சமத்தானவன் அதே நேர, சாமர்த்தியமானவன்..வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ள தெரிந்தவன்..அழகான வாழ்க்கையை வாழ்வது வேறு..இருக்கும் வாழ்க்கையை அழகாக்கி கொள்வது வேறு..பிறப்பினால் ஒருவனின் குணம் தீர்மானிக்க படுவதில்லை.ஒருவனின் குணத்தை அவன் தான் தீர்மானிக்கிறான் என்பதை இச்சமுகத்துக்கு உணர்த்துகிறான் சுமந்த் நாராயன்.அவனது பிஎன்ஏ கண்ணுக்கு முன் அழகாய்க் காட்சிப்படுத்திகிறார் ஆசிரியர்….சுமந்த் அவன் வாழ்க்கையை அவனே செதுக்கிய சிற்பி..அதுவும் அழகாய் செதுக்கியவன்/.
 

ஷ்ரேயா அவளது நுண்ணுணர்வுகளை நுணுக்கமாய் படைத்துள்ளார்.எனக்கு பிடித்த வித்த்தில் செதுக்கிய கதாபாத்திரம்.அவளது துணிச்சல் நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
 

அவர்களிடையே எப்படி வந்த்து என்று தெரியாமலே சாரலாய் வருடும் தென்றல்…
 

விவேக் – வினோ ஆத்ர்ச தம்பதி.ஆனா விவேக் பத்தி பேசினா நான் என்ன ஆவேன்னு உங்களுக்கே தெரியும் யுத் மதர்!!..(உங்களுக்கு மனசாட்சியே இல்ல)
 

சமூக கருத்துகளோடு சாரலாய் காதலும் stylish ஆன கதை…சுமந்த் என்னையும் கட்த்திட்டு போகவும்..உங்க கையால் ஜூஸ் குடிக்க ரெடி மை மேன்….
 

பாரதிம்மா-
 

“நான் என்பது உடலானால்
என் கணவர் என்னை காதலிக்கிறார்”
வலி வலி வலி மட்டுமே மிகுந்த வார்த்தைகள்…என்னால தாங்கிக்கொள்ளவே முடில….
 

புவனா- தவறு செய்யாமல் சிலுவை சுமக்கும் சராசரி பெண்.ஷ்ரவனின் மாற்றம் மகிழ்ச்சி.நட்ஸ் சூப்பர்..அச்சிட்டப்பட்ட ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது..ரெஜிஸ்தர் மேரேஜ் பத்தி ஹா ஹா உங்க சேவைக்கு நன்றி aunty..when I think of that ha ha ha ..உங்க க்டமை உணர்ச்சிக்கு அளவே இல்லை.அந்த வில்லங்கம் பிடிச்ச வில்லங்கள் பத்தி பேச விருப்பமில்லை.
 

என் அண்ணாவே மாப்ள பார்க்கும்போது சுமந்த் தான் ஃப்ர்ஸ்ட் சாய்ஸ் சொல்லிட்டேன்…ஆமா உங்க மேனேஜர் தானே கவர் பிக் தீபிகாவை செலக்ட் செய்த்து..ஹா ஹா…

படிக்காதவங்களாம் கண்டிப்பா they have missed a must read story…kudos to ur work aunty.

இப்போ என் இதயம் யாரை கேட்குதுன்னு நான் சொல்லிட்டேன்…சீக்கிரமே ஸ்டார்ட் செய்யவும்.

வித் லவ்(சுமந்துக்கு)
பவித்ரா நாராயணன்

Wednesday, August 16, 2017

தோழி சூர்யமுகி அவர்களின் மின்னஞ்சல் பதிவு



ஹாய் ஹமீதா,             
             உங்கள் கற்பனை என்னும் சோலையில் உதித்த ஐந்தாம் மலரான `பேசும்  மொழியிலெல்லாம்' கதை புத்தகமாக வெளிவந்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
            
தளத்தில் பதிவிடப்பட்ட கதை பாதியில் நிறுத்தப்பட்டதும் சற்று  வருத்தம் ஏற்பட்டது உண்மை...ஆனால் புத்தகமாக  இதனை படிக்கும்  ஆர்வம் நாளுக்கு  நாள் அதிகரித்ததும் உண்மை.ஒருவழியாக புத்தகம் வாங்கி படித்து விட்டேன்.
             
ஹமீதா கதைகளின் நாயகர்களிடமிருந்து சற்று  வேறுபட்டு  வேலையில்லா இளைஞனாக தந்தையிடம் திட்டு வாங்கும் வெற்றிமாறன் .                             வேலைக்காக சென்னை வருமிடத்தில் கதாநாயகி நயனிகாவை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறான்.நாளடைவில் காதல் கொள்கிறான்....
            
நயனிகா...குடும்பத்துக்காக தன் கனவுகளைத் துறந்து மிகப்பெரிய பாரத்தை தன் தலையில் தாங்கி வேலைக்கு செல்லும் பெண்.
        
இவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் முதளாளி மகனாக ப்ரமோத்...வெற்றியின் பால்ய  நண்பன்.
       
இவர்களின் முக்கோண காதல் கதையை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறீர்கள்.
         
இதோடு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள்தமிழக அரசியல் சூழல், புயல் பாதிப்புகள் என அனைவரையும் ஒன்பது மாதங்கள் பின்னோக்கி பயணிக்க வைத்திருக்கிறீர்கள்....
           
பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பற்றிய பகுதியும் மனதை பதைபதைக்க வைத்தது.        
            
வெற்றி நயனியின் காதல் அத்தனை அழகு....கடன் பிரச்சனை தீர ப்ரமோதை மணக்க நிர்ப்பந்திக்கப்படும் நயனி என்ன ஆனாள்....காதலனாய் காவலனாய் வெற்றி அவளை காத்தானா அல்லது தன் காதலை ப்ரமோத்துக்கு தாரை வார்த்தானா என்பதை மிக எதார்த்தமாக கொண்டு சென்ற விதம் அருமை.
                
வெற்றியின் குறும்பு ரசிக்க வைத்தது...ப்ரமோத்தின் இன்னொரு பக்கம் தெரியும் போது சற்று அதிர்ந்தது உண்மை....நயனிக்கு இந்த வாழ்வே மிகப் பொருத்தம்...
               
நடுத்தர வர்க்க குடும்ப தலைவரான மோகன்ராமின் சில முடிவுகளை ஏற்க முடியாவிட்டாலும் கடைசியில் தான் ஒரு பாசமான தந்தை என்பதை அவர் நிரூபிப்பது ஆறுதல்
             
வெற்றியின் தந்தை வீரராகவன், சுயநலத்தின் மொத்த உருவமாக நயனியின் அக்கா கார்த்திகா, அப்பாவி அன்னையாக விஜயா,நண்பர்களான ஆனந்தி தியாகு,ப்ரமோத்தின் தந்தை பத்மநாபன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. ...
            
மொத்தத்தில் எதார்த்தமான அழகான காதல் கதையை தந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
                விரைவில் உங்கள் ஆறாம் படைப்போடு எங்களை சந்திக்க வாருங்கள்.